4ம் வகுப்பு மாணவி தாக்கப்பட்ட விவகாரம்; பள்ளி தலைமையாசிரியர் மீது மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார்

கோவை : கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4ம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் தாக்கிய விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை : கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 4ம் வகுப்பு மாணவியை சக மாணவர்கள் தாக்கிய விவகாரத்தில் பள்ளி தலைமையாசிரியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவரது மகள் சவுரிபாளையம் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலயா பகுதியில் 4ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பள்ளியில் சிறுமியை சக மாணவர்கள் 3 பேர் தாக்கியுள்ளனர். இதில், சிறுமியின் கண்களுக்குச் செல்லும் நரம்புகளில் விரிசல் ஏற்பட்டு, கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறுமி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கேந்திரிய வித்யாலயா பள்ளி நிர்வாகத்திடம் கோகுல்ராஜ் புகாரளித்தார். 



மேலும், தனது மகள் சக மாணவர்களால் தாக்குதல் நடத்தியது தொடர்பாக கோகுல்ராஜ் பீளமேடு காவல் நிலையம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இருப்பினும், பள்ளி தலைமையாசிரியர் தாக்கிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி கோகுல்ராஜ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் மனு அளித்தார்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....