நான் ஒரு பெண் என்பதால் அலைகழிக்கப்படுகின்றேன்; தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வேன் - சரிதா நாயர்

கோவை : கோவை 6 வது குற்றவியல் நீதிமன்றம் இன்று வழங்கிய மூன்று ஆண்டு சிறை தண்டணையை எதிர்த்து அடுத்த வாரம் மேல் முறையீடு செய்ய இருப்பதாக கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் தெரிவித்தார்.

கோவை : கோவை 6 வது குற்றவியல் நீதிமன்றம் இன்று வழங்கிய மூன்று ஆண்டு சிறை தண்டணையை எதிர்த்து அடுத்த வாரம் மேல் முறையீடு செய்ய இருப்பதாக கேரளாவை சேர்ந்த சரிதா நாயர் தெரிவித்தார்.

கோவை நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இன்று நீதிமன்றம் விதித்த தண்டணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எனவும் நீதிமன்ற உத்திரவினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கின்றேன் எனவும் தெரிவித்தார். 

தன் மீது தொடரப்பட்ட வழக்கு சிவில் வழக்கு தன்மை கொண்டது எனவும், ஆனால் கிரிமினல் வழக்காக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது என தெரிவித்த அவர், கோவை 6 வது குற்றவியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அடுத்த

வாரம் மேல் முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், கேரளாவில் தன் மீது தொடரப்பட்ட வழக்குகள் பெரும்பாலும் முடிந்து விட்டதாகவும், மீதம் உள்ள வழக்குகளையும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள போவதாகவும் தெரிவித்தார். 

நான் ஒரு பெண் என்பதால் அலைகழிக்கப்படுகின்றேன் எனவும், கோவை நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் இந்த வழக்கை சந்தித்து இருக்கின்றேன் எனவும், இந்த தீர்ப்பையும் எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருக்கிறேன் என தெரிவித்தார். 



சமூக வலைதளங்களில் தன்னை பற்றி இருந்த வீடியோ எதுவும் இப்போது இல்லை எனவும் அவை அகற்றப்பட்டு விட்டது எனவும் தெரிவித்தார். 

மேலும், கேரள காங்கிரஸ் கட்சியில் இருந்து இப்போது தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனவும், காங்கிரஸ் கட்சி பூஜ்ஜியமாகி விட்டது எனவும், அந்த கட்சி தலைவர்கள் சிறையில் இருப்பதால் என்னை மிரட்ட அவர்களுக்கும் நேரமில்லை எனவும் தெரிவித்தார்..

அந்த கட்சி தலைவர்கள் சிறையில் இருக்கின்றனர் எனவும் இன்னும் சிலர் சிறை செல்ல இருக்கின்றனர் எனவும் சரிதா நாயர் தெரிவித்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...