கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காலமுறை ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் காலமுறை ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குதல், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்கள் உயர்த்துதல், மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு என்ற நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 6 நாட்களாக இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாத கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்குதல், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்கள் உயர்த்துதல், மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு என்ற நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 6 நாட்களாக இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளாத கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இன்று தங்களது போராட்டத்தை துவங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
