சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கு: நடிகை சரிதா நாயருக்கு வரும் நவ., 14ம் தேதி வரை ஜாமீன்

கோவை : கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் கைதான நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய மூன்று பேரின் தண்டணை மேல் முறையீடு செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு, மூன்று பேருக்கும் வரும் நவம்பர் 14ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.



கோவை : கேரளாவை உலுக்கிய சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் கைதான நடிகை சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய மூன்று பேரின் தண்டணை மேல் முறையீடு செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு, மூன்று பேருக்கும் வரும் நவம்பர் 14ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கேரளாவில் சோலார் பேனல் மோசடி புகாரில் சிக்கியவர் சரிதா நாயர். இந்த விவகாரம்‌ தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை சரிதா நாயர்‌, பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில்‌ விடுவிக்கப்பட்டார்‌. சிறையில் இருந்து வெளியே வந்த அவர்‌, காங்கிரஸ்‌ அரசில்‌ அமைச்சர்களாக இருந்த பலரும்‌ பண மோசடி செய்ததாக குற்றம்‌ சாட்டினார்‌.

மேலும்‌, அப்போதைய முதல்வர்‌ உம்மன்சாண்டி, காங்கிரஸ்‌ எம்‌.எல்‌.ஏ. ஹிபி ஈடன்‌ ஆகியோர்‌ தனக்கு பாலியல்‌ தொல்லை கொடுத்ததாகவும்‌ கூறினார்‌. இந்த விவகாரம்‌ பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்கு அம்மாநில நீதிமன்றத்தில்‌ விசாரணையில்‌ உள்ளது.

இந்த நிலையில், இவர் கடந்த 2009ம் ஆண்டு கோவை வடவள்ளியில் ‘ஐசிஎம்எஸ்' என்ற பெயரில் காற்றாலை உபகரணங்கள் விற்பனை செய்து வந்தார். அப்போது, காற்றாலை அமைத்து தருவதாக கூறி கோவையை சேர்ந்த தியாகராஜன் மில்ஸ் சேர்மன் தியாகராஜனிடம் ரூ.28 லட்சம், ஊட்டியை சேர்ந்த ஸ்ரீ அபு பாபாஜி சேரிடபிள் டிரஸ்ட் நிர்வாகிகள் வெங்கட் ரமணன் மற்றும் ஜோயோவிடம் ரூ.5.50 லட்சம் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்தாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை 6வது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், சோலார் பேனல் நிறுவன மோசடி வழக்கில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி ஆகிய மூவரையும் குற்றவாளியாக என கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அப்போது, அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், மேலாளர் ரவி, ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன், அபராத தொகை கட்ட தவறினால் 9 மாதம் கூடுதல் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தீர்ப்பளித்தார்.

இதனிடையே சரிதா நாயரின் முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன், இந்த வழக்கில் தான் ஏற்கனவே சிறையில் இருந்ததால் அந்த காலத்தை தண்டனைக் காலத்தில் கழித்து கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவை 6வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் தள்ளுபடி செய்தார்.

பின்னர், சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் மேலாளர் ரவி ஆகிய மூன்று பேரும் தண்டனையை நிறுத்தி வைக்க கோரி நீதிபதியிடம் மனு அளித்ததை தொடர்ந்து, மூன்று பேரின் தண்டனை மேல் முறையீடு செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டு, மூன்று பேருக்கும் வரும் நவம்பர் 14ம் தேதி வரை ஜாமீன் வழங்கப்பட்டது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...