கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தினை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தினை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எடுத்துக்கொண்டனர்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச்சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்தவர். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்து இன்றைய ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கினார்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்திய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டை பாதுகாப்போம் சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலை நோக்கு பார்வையால் ஒன்றிணைந்த தேச நல்லுணர்வினை பேண எனது பங்களிப்பை நல்குவேன் என்ற உறுதிமொழியை அரசு ஊழியர்கள் எடுத்துக் கொண்டனர்.
இந்த உறுதிமொழி நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) உமா மகேஸ்வரி, மக்கள் தொடர்பு அலுவலர் நல்லதம்பி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.