நீலகிரி : கூடலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தனியார் தோட்ட நிர்வாகங்களில் கடந்த 2001ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய வேளாண் வருமான செலுத்தாத தோட்ட நிறுவனங்கள் மீது வருவாய்த்துறையினர் ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : கூடலூர் வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட தனியார் தோட்ட நிர்வாகங்களில் கடந்த 2001ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய வேளாண் வருமான செலுத்தாத தோட்ட நிறுவனங்கள் மீது வருவாய்த்துறையினர் ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று ரூபாய் 13 லட்சம் வரை பாக்கி வைத்திருந்த கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள தனியார் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான மூன்று ஜீப்புகள் உட்பட ஒரு கார் மற்றும் ஒரு டிராக்டர் ஆகிய 5 வாகனங்கள் ஜப்தி செய்யப்பட்டது.
இதேபோல் ரூபாய் 4.87 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்த பல் மாடி பகுதியைச் சேர்ந்த தனியார் தோட்ட நிர்வாகத்தின், மூன்று காப்பிக்கொட்டை பதப்படுத்தும் கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன.
கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார் உத்தரவின்பேரில், கூடலூர் தாசில்தார், சங்கீதா ராணி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த ஜப்தி நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று ரூபாய் 13 லட்சம் வரை பாக்கி வைத்திருந்த கூடலூர் ஊட்டி சாலையில் உள்ள தனியார் தோட்ட நிர்வாகத்திற்கு சொந்தமான மூன்று ஜீப்புகள் உட்பட ஒரு கார் மற்றும் ஒரு டிராக்டர் ஆகிய 5 வாகனங்கள் ஜப்தி செய்யப்பட்டது.
இதேபோல் ரூபாய் 4.87 லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருந்த பல் மாடி பகுதியைச் சேர்ந்த தனியார் தோட்ட நிர்வாகத்தின், மூன்று காப்பிக்கொட்டை பதப்படுத்தும் கட்டிடங்கள் சீல் வைக்கப்பட்டன.
கூடலூர் ஆர்டிஓ ராஜ்குமார் உத்தரவின்பேரில், கூடலூர் தாசில்தார், சங்கீதா ராணி தலைமையில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் இந்த ஜப்தி நடவடிக்கைகளை இன்று மேற்கொண்டனர்.