நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் குப்பைக் கூளம் மேலாண்மை பூங்காவை அம்மாவட்ட ஆட்சியர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.
நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக் குப்பைக் கூளம் மேலாண்மை பூங்காவை அம்மாவட்ட ஆட்சியர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக்கை பிரித்தெடுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு குப்பை கூளம் மேலாண்மை பூங்கா அமைக்கும் நிகழ்ச்சி குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்நிகழ்ச்சி எற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு பிளாஸ்டிக் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை திறந்து வைத்து பேசுகையில், வீடுகளிலோ அல்லது தொழில் நிறுவனங்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து தர வேண்டும் என்றும் இக்குப்பைகளை தனியார் தொண்டு நிறுவனத்தின் இயந்திரம் மூலம் பிரித்து எடுத்து பேக்கேஞ் ( Package) செய்து அதனை பாதுகாப்பான முறையில் எரிக்கப்படும் என்று கூறினார்.

இதில், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக அமைப்பினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் குன்னுார் நகராட்சி ஆணையாளர் (பொ) பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் மால்முருகன். குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் குமார் தனியார் தொண்டு நிர்வாகிகள் சமந்தா, வசந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பிளாஸ்டிக்கை பிரித்தெடுக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு குப்பை கூளம் மேலாண்மை பூங்கா அமைக்கும் நிகழ்ச்சி குன்னூர் நகராட்சி மற்றும் கிளீன் குன்னூர் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இந்நிகழ்ச்சி எற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு பிளாஸ்டிக் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை திறந்து வைத்து பேசுகையில், வீடுகளிலோ அல்லது தொழில் நிறுவனங்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை, பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து தர வேண்டும் என்றும் இக்குப்பைகளை தனியார் தொண்டு நிறுவனத்தின் இயந்திரம் மூலம் பிரித்து எடுத்து பேக்கேஞ் ( Package) செய்து அதனை பாதுகாப்பான முறையில் எரிக்கப்படும் என்று கூறினார்.

இதில், தனியார் பள்ளி மாணவ, மாணவிகள், தொண்டு நிறுவனத்தினர், சமூக அமைப்பினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேலும் குன்னுார் நகராட்சி ஆணையாளர் (பொ) பாலமுருகன், சுகாதார ஆய்வாளர் மால்முருகன். குன்னூர் காவல் துறை துணை கண்காணிப்பாளர் குமார் தனியார் தொண்டு நிர்வாகிகள் சமந்தா, வசந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.