கோவை : கோவையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று 'அபேட்' மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை : கோவையில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று 'அபேட்' மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி நேரில் ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் அவர்கள் உத்தரவின்படி, மத்திய மண்டலம், 54-வது வார்டுக்குட்பட்ட ராம்நகர் பகுதியிலுள்ள சரோஜினி வீதியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று 'அபேட்' மருந்தை தொட்டிகளில் ஊற்றுவதையும், தேவையில்லாத பொருட்களை அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருவதையும், பொது மக்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரில் கொசுப் புழுக்கள் உள்ளனவா என்பதையும் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி பார்வையிட்டார்.
இந்த ஆய்வின் போது, மத்திய மண்டல உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.