கோவை : தமிழ்நாட்டில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர தயாராக உள்ளதாகவும், மூடப்படாத ஆழ்துளை கிணறு பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.2 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என யங் இந்தியன் பவுண்டேசன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவை : தமிழ்நாட்டில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர தயாராக உள்ளதாகவும், மூடப்படாத ஆழ்துளை கிணறு பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.2 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என யங் இந்தியன் பவுண்டேசன் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் யங் இந்தியன்ஸ் பவுண்டேசன் என்ற அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அந்த அமைப்பின் செயலாளர் விஷ்ணு பிரபு, தமிழ்நாட்டில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை இலவசமாக மூடி தர தயாராக உள்ளதாகவும் 9150226634 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்த தகவல்களை அளிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும், மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று தெரிவித்த அவர், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆழ்துளை கிணறுகளை மூடும் பணிகளை விரிவுபடுத்த உள்ளதாகவும், நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுஜித் உயிரிழப்பே இறுதியாக இருக்க வேண்டும் என்பதற்காக இதனை செய்ய உள்ளதாக கூறினார்.