மேட்டுப்பாளையத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலம்: போக்குவரத்து துண்டிப்பால் பொதுமக்கள் அவதி

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஏழு எறுமைப்பள்ளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஏழு எறுமைப்பள்ளத்தில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் புறநகர் பகுதிகளான காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு பருவமழை பெய்தது. இதனால் பெரியநாயக்கன்பாளையம் மலைப்பகுதியில் உருவாகி 15 கிலோ மீட்டர் பயணித்து, பவானி ஆற்றில் கலக்கும் மேட்டுப்பாளையத்தின் முக்கிய நீராதாரமான ஏழு எறுமைப்பள்ளத்தில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் காரமடை அருகே உள்ள பிளிச்சி ஊராட்சிக்குட்பட்ட அம்மன் கோவில் பகுதியில் இருந்த பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.



இந்த பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வரும் நிலையில், அந்த பாலத்தினை கடந்து தான் சென்றாக வேண்டும். ஒரு வழிபாதை மட்டுமே இருந்த நிலையில், அது காட்டாற்று வெள்ளம் காரணமாக உடைந்து, சுமார் 10 அடிக்கும் மேல் பள்ளம் ஏற்பட்டு சாலைகளும் துண்டிக்கப்பட்டதால் அந்த கிராமத்திற்கு செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் முடங்கியுள்ளனர்.

மேலும், பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத அளவுக்கு சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களை எடுத்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளதால் உடைந்த பாலத்தை சீரமைத்துத் தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...