கோவை : கோவை விளாங்குறிச்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய சாலை வசதியும், உடல்களை எரியூட்ட கூரை வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : கோவை விளாங்குறிச்சி பகுதியில் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய சாலை வசதியும், உடல்களை எரியூட்ட கூரை வசதியும் செய்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது லெனின் வீதி மற்றும் அம்பேத்கர் நகர். இங்கு, சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட விளாங்குறிச்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி மயானம், சாதி இந்துக்களுக்குத் தனி மயானம் என இரட்டை மயான முறை இன்றளவும் இருந்து வருகின்றது.
சாதி இந்துக்கள் தங்கள் சமூகத்தில் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய சாலை வசதியும், உடல்களை எரியூட்ட கூரை வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தாழ்த்தப்பட்டவர்களின் உடல்களை அந்த சமூகத்திற்கான மயானத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி உட்பட போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்பட வில்லை.
இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இறந்துபோனால், அவர்களின் உடல்களை தனியார் நிலங்கள் வழியாகவும், சாக்கடை ஓடைகளின் வழியாகவும், முட்புதர்களின் வழியாகவும் தூக்கிச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இது குறித்து லெனின் வீதி மற்றும் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும், கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும் இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், விளாங்குறிச்சியில் பொது மயானம் வேண்டும் என்று தாங்கள் கேட்கவில்லை என தெரிவிக்கும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள், பிற சமூகத்தவரின் மயானத்திற்கு செல்ல வசதிகள் செய்து கொடுத்துள்ளதை போல தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் மயானத்திற்கு செல்ல உரிய சாலை வசதி, கூரை வசதி உட்பட அடிப்படை வசதிகளை மட்டும் செய்து கொடுத்தால் போதும் என்றனர். மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் இருப்பதால், இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்ய கூட பெரும்பாலானவர்கள் வருவதில்லை என அப்பகுதி இளைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகராட்சி 32வது வார்டுக்கு உட்பட்ட விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது லெனின் வீதி மற்றும் அம்பேத்கர் நகர். இங்கு, சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். மாநகராட்சி எல்லைக்குட்பட்ட விளாங்குறிச்சியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி மயானம், சாதி இந்துக்களுக்குத் தனி மயானம் என இரட்டை மயான முறை இன்றளவும் இருந்து வருகின்றது.
சாதி இந்துக்கள் தங்கள் சமூகத்தில் இறந்தவர்களின் உடல்களை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய சாலை வசதியும், உடல்களை எரியூட்ட கூரை வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தாழ்த்தப்பட்டவர்களின் உடல்களை அந்த சமூகத்திற்கான மயானத்திற்கு கொண்டு செல்ல சாலை வசதி உட்பட போதிய அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்பட வில்லை.
இதனால் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் இறந்துபோனால், அவர்களின் உடல்களை தனியார் நிலங்கள் வழியாகவும், சாக்கடை ஓடைகளின் வழியாகவும், முட்புதர்களின் வழியாகவும் தூக்கிச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர். இது குறித்து லெனின் வீதி மற்றும் அம்பேத்கர் நகர் பகுதி மக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திற்கும், கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் புகார் அளித்தும் இது வரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி இளைஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், விளாங்குறிச்சியில் பொது மயானம் வேண்டும் என்று தாங்கள் கேட்கவில்லை என தெரிவிக்கும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட மக்கள், பிற சமூகத்தவரின் மயானத்திற்கு செல்ல வசதிகள் செய்து கொடுத்துள்ளதை போல தாழ்த்தப்பட்ட சமூகத்தவரின் மயானத்திற்கு செல்ல உரிய சாலை வசதி, கூரை வசதி உட்பட அடிப்படை வசதிகளை மட்டும் செய்து கொடுத்தால் போதும் என்றனர். மயானத்திற்கு செல்ல போதிய சாலை வசதி இல்லாமல் இருப்பதால், இறந்தவரின் உடல்களை அடக்கம் செய்ய கூட பெரும்பாலானவர்கள் வருவதில்லை என அப்பகுதி இளைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.