கோவை இரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

கோவை : கோவை இரயில் நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகளின் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை : கோவை இரயில் நிலையத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுகளின் பணிகள் டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை இரயில் நிலையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் நிலையில் பயணிகள் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது. 



குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் எஸ்கலேட்டர் எனப்படும் நகரும் படிக்கட்டுகளை அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் நிலையில், ஏற்கனவே நடைமேடை ஒன்று ஏவில் அமைக்கப்பட்டிருந்த நகரும் படிக்கட்டுகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்த போது பராமரிப்பு பணி காரணமாக, தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது.

இதனிடையே, இரண்டாம் கட்டமாக அமைக்கப்பட்டு வரும் நகரும் படிக்கட்டுக்களின் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் இந்த பணிகள் செப்டம்பர் மாத இறுதிக்குள் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த பணிகள் தாமதாகி வருகிறது.



இது தொடர்பாக இரயில்வே அதிகாரிகளிடம் பேசிய போது, பணிகள் வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் முடியும் என ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்துள்ளதாகவும், அதன் பின்னர் மாதிரி முன்னோட்டம் விடப்பட்டு, பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்ட பின்னர், அதிகாரப்பூர்வமாக மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் ஒப்புதலுக்கு பிறகு நகரும் படிக்கட்டுகள் செயல்பாட்டிற்கு வரும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...