திருப்பூர் : திருப்பூரில் பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த கார் மெக்கானிக் ஷெட்டிற்க்கும் பரவியதால் 5 கார்கள் எரிந்து நாசமானது.
திருப்பூர் : திருப்பூரில் பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட தீ, அருகிலிருந்த கார் மெக்கானிக் ஷெட்டிற்க்கும் பரவியதால் 5 கார்கள் எரிந்து நாசமானது.

திருப்பூர் ஆலங்காடு பகுதியில் தர்மராஜ் (48) என்பவர் பழைய இரும்பு மற்றும் வேஸ்ட் பொருட்களை விற்பனை செய்யும் குடோன் நடத்தி வருகிறார். இன்று மாலை குடோனிலிருந்து புகை வருவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இருப்பினும் அதற்குள் தீ, மளமளவென அருகில் இருந்த கார் மெக்கானிக் ஷெட்டிற்க்கும் தீ பரவி ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த 5 க்கும் மேற்பட்ட கார்களுக்கும் தீயில் எரிய துவங்கியது.
சம்பவ இடத்திற்க்கு திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து விரைந்து வந்த 4 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்பகுதியில் சிலர் பட்டாசு வெடித்ததே இந்த விபத்திற்கான காரணம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.