சிறுவர்களிடம் காலாவதியான ஐஸ்கள் விற்பனை ; இருவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்

திருப்பூர் : திருப்பூரில் காலாவதியான ஐஸ் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை பிடித்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூர் : திருப்பூரில் காலாவதியான ஐஸ் விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை பிடித்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

திருப்பூரை சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கு சொந்தமான ஈஸ்வரன் என்ற ஜஸ் நிறுவனம், காங்கேயம் சாலை, அதியமான் இரண்டாவது வீதியில் செயல்பட்டு வருகிறது. இவரிடம் பணியாற்றும். ராமச்சந்திரன் (32) மற்றும் மயில்சாமி(56) ஆகிய இருவரும் டூம் லைட் பகுதியில் தள்ளு வண்டியில் ஜஸ் விற்பனையில் ஈடுபட்ட போது, அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர் இந்த ஜஸ்சை வாங்கி சாப்பிட்டுள்ளனர். 

ஐசை சாப்பிட்ட சில நிமிடங்களிலேயே அவர்களுக்கு வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகம் அடைந்த அவர்களது உறவினர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி ஜஸ் கடையை சுற்றி வளைத்து, தள்ளுவண்டியில் வைக்கப்பட்டிருந்த, ஐஸ் பெட்டிக்குள் இருந்த ஜஸ்களை பார்த்த போது அவை அனைத்தும் காலாவதியான ஐஸ் என்பதும், பெரும்பாலான ஜஸ்களில் துர்நாற்றம் வீசுவதுமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.



இதையடுத்து விற்பனையில் ஈடுபட்ட ராமச்சந்திரன் மற்றும் மயில்சாமி ஆகிய இருவரையும் பிடித்தோடு, இருவரும் விற்பனையில் ஈடுபட்ட வந்த இரண்டு தள்ளுவண்டிகளையும் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

இது குறித்து தகவல் அறிந்த ணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஐஸ்களை பரிசோதனைக்கான ஆய்வு கூடத்திற்க்கு அனுப்புவதாகவும், காலாவதி ஐஸ்கள் என ஆய்வில் முடிவு செய்யப்பட்டால், நிறுவன உரிமையாளர், மற்றும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...