கோவையில் தாறுமாறாக வந்த லாரி ; நூலிழையில் உயிர் தப்பிய மூன்று பயணிகள்

கோவை : கோவையில் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் மீது மோத வந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


கோவை : கோவையில் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த லாரி திடீரென பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் மீது மோத வந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கோவை பல்லடம் செட்டிபாளையம் சாலையில் உள்ள சித்தநாயகன்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அலுவலகம் அருகே கட்டப்படாத பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது.



இந்நிலையில், இன்று காலை பேருந்துக்காக சித்தநாயகன்பாளையம் கிராமத்தை சேர்ந்த தாமோதர பிரகாஷ், தீபிகா, சுசீலா ஆகிய மூவர் காத்திருந்தனர். அப்போது, அந்த வழியே தாறுமாறாக வந்த லாரியானது பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மீது மோத வந்தது. இதையடுத்து, அதிர்ச்சியடைந்த பயணிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள பின்புறமாக ஓடியபோது சாலையின் அருகே தோண்டப்பட்ட குழியில் விழுந்தனர்.



இதையடுத்து, இவர்கள் 3 பேரும் நொடிப்பொழுதில் நூலிழையில் உயிர் தப்பினர். இந்த காட்சிகள் அருகே உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பலமுறை அந்த பகுதியில் வேகத்தடையும், முறையான பேருந்து நிறுத்தமும் அமைத்துத் தரக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தற்போது அதிவேகமாக வந்த லாரி ஆனது பொதுமக்கள் உயிரை பறிக்க முற்பட்டுள்ளது.

மேலும், அடுத்தகட்டமாக பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன், இந்த சாலைகளில் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....