கோவை : மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தால் நீரில் உயர்மட்ட பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி கிராம மக்கள் அபாய பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை : மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று வெள்ளத்தால் நீரில் உயர்மட்ட பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்ட நிலையில், அப்பகுதி கிராம மக்கள் அபாய பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை பருவமழை காரணமாக மூன்றாவது முறையாக நிரம்பியது. தென் மேற்கு பருவமழையை தொடர்ந்து வட கிழக்கு பருவமழையும் முன்கூட்டியே துவங்கியதால், பில்லூர் அணை நிரம்பி அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட உபரி நீர், பவானி ஆற்றின் வழியே பவானிசாகர் அணையை அடைந்த நிலையில் பவானிசாகர் அணையும் நிரம்பியது.

இதன் காரணமாக அதன் நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரானது அதிகரித்து கொண்டே வந்தது. இதனால் 30 அடி உயரம் கொண்ட இந்த உயர் பாலம் பவானி சாகர் அணை 100 அடியை எட்டும் போது முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி பாலத்திற்கு மேல் சுமார் 5 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இப்பாலத்தினை கடந்து சென்றே காந்தவயல், உளியூர், ஆலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், தற்போது கிராமத்தையும் கிராமத்தினை நகரத்துடன் இனைக்கும் பாலம் என முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தானது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கிராமங்களில் இருந்து நகரத்தினை அடைய நாற்பது அடிக்கும் மேல் தேங்கியுள்ள தண்ணீரில் ஆபத்தான முறையில் எவ்வித பாதுகாப்பு வசதிகளுமின்றி பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பருவமழையின் போது தொடர்ந்து மூன்று ஆண்டுக்கு மேல் இதே நிலைமை நீடிப்பதால், விவசாய விளைப்பொருட்களை கூட பரிசலில் எடுத்து வருவதால் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணை பருவமழை காரணமாக மூன்றாவது முறையாக நிரம்பியது. தென் மேற்கு பருவமழையை தொடர்ந்து வட கிழக்கு பருவமழையும் முன்கூட்டியே துவங்கியதால், பில்லூர் அணை நிரம்பி அதில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்ட உபரி நீர், பவானி ஆற்றின் வழியே பவானிசாகர் அணையை அடைந்த நிலையில் பவானிசாகர் அணையும் நிரம்பியது.

இதன் காரணமாக அதன் நீர்த்தேக்க பகுதியில் தண்ணீரானது அதிகரித்து கொண்டே வந்தது. இதனால் 30 அடி உயரம் கொண்ட இந்த உயர் பாலம் பவானி சாகர் அணை 100 அடியை எட்டும் போது முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி பாலத்திற்கு மேல் சுமார் 5 அடிக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
இப்பாலத்தினை கடந்து சென்றே காந்தவயல், உளியூர், ஆலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும். ஆனால், தற்போது கிராமத்தையும் கிராமத்தினை நகரத்துடன் இனைக்கும் பாலம் என முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்தானது முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த கிராமங்களில் இருந்து நகரத்தினை அடைய நாற்பது அடிக்கும் மேல் தேங்கியுள்ள தண்ணீரில் ஆபத்தான முறையில் எவ்வித பாதுகாப்பு வசதிகளுமின்றி பரிசல் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பருவமழையின் போது தொடர்ந்து மூன்று ஆண்டுக்கு மேல் இதே நிலைமை நீடிப்பதால், விவசாய விளைப்பொருட்களை கூட பரிசலில் எடுத்து வருவதால் வாழ்வாதாரமே பாதிக்கப்படுவதாக அப்பகுதி கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.