கோவை : தாமஸ் கிளப்பில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க, கோவை மாவட்ட நிர்வாகிகள் சங்க தேர்தலில் இமயவரம்பன் அணி 183 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.
கோவை : தாமஸ் கிளப்பில் நடைபெற்ற தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க, கோவை மாவட்ட நிர்வாகிகள் சங்க தேர்தலில் இமயவரம்பன் அணி 183 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க கோவை மாவட்ட நிர்வாகிகள் சங்க தேர்தல் தாமஸ் கிளப்பில் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுந்தரராமன் தலைமையிலான பாரதி அணியும் முத்துக்குமார் தலைமையிலான இமயவரம்பன் அணியும் போட்டியிட்டன.

மொத்தம் 440 உறுப்பினர்கள் கொண்ட வருவாய் அலுவலர் சங்கத்தில் நேற்றைய தேர்தலில் 358 பேர் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் மாவட்ட தலைவர் போட்டிக்கு பாரதி அணி சார்பில் போட்டியிட்ட சுந்தரராமனை எதிர்த்து இமயவரம்பன் அணியைச் சேர்ந்த முத்துக்குமார் போட்டியிட்டு 183 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
அதேபோல, செயலாளர் பதவிக்குப் போட்டியிட்ட சண்முக ராஜ் 182 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பொருளாளர் பதவிக்கான தேர்தலில் பாரதி அணியைச் சேர்ந்த ஹாரிஸ் 203 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தனபால் 152 வாக்குகள் பெற்றுத் தோல்வி அடைந்தார். பாரதி அணியில் வெற்றி பெற்ற ஒரே நபர் ஹாரிஸ் மட்டுமே.
மேலும், இனை செயலாளர்(நகரம்)-(புறநகர்) துணைத் தலைவர் (நகரம்)-(புறநகர்) ஆகிய பதவிகளுக்குப் போட்டியிட்ட இமயவரம்பன் அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். தேர்தல் அலுவலர் முருகானந்தம், சிலம்பரசன் தலைமையில் நேற்று மதியம் ஒரு மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு, இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தேர்தல் முடிவுகள் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வெளியிடப்பட்டது.
வெற்றி பெற்றவர்களை வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பூச்செண்டு கொடுத்தும் பொன்னாடை போர்த்தி வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.