கோவை : ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் வடவள்ளியில் உள்ள ஆலயம் பயிற்சி வளாகத்தில் பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி முகாம் துவங்கப்பட்டு உள்ளது.
கோவை : ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை சார்பில் வடவள்ளியில் உள்ள ஆலயம் பயிற்சி வளாகத்தில் பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி முகாம் துவங்கப்பட்டு உள்ளது.
ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் இந்த பயிற்சி முகாமை துவக்கிவைத்து பேசுகையில், பெண்களுக்கான இந்த பயிற்சி மையத்தில் காலை 7 முதல் 9 மணி வரையிலும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் பயிற்சி தரப்பட உள்ளதாக தெரிவித்தார். மன அழுத்தம், சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சிறப்பு யோகா பயிற்சி இங்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், கோபம், விரக்தி போன்றவற்றை தவிர்க்கும் வகையில் மன ரீதியான முன்னேற்றம் தரும் வகையில் மனதை சிறப்பாக கையாளும் வகையில் பயிற்சி தரப்படுவதாகவும் இந்த பயிற்சி பெண்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 86107 79271, 97894 17122 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அப்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது ஆலயம் அறக்கட்டளை வளாகத்தில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 800 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு இலவசமாக வேட்டி, சேலை, பட்டாசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆலயம் அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆலயம் நல்வாழ்வு அறக்கட்டளை இயக்குனர் டாக்டர் ஷர்மிளா சந்திரசேகர் இந்த பயிற்சி முகாமை துவக்கிவைத்து பேசுகையில், பெண்களுக்கான இந்த பயிற்சி மையத்தில் காலை 7 முதல் 9 மணி வரையிலும் மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் பயிற்சி தரப்பட உள்ளதாக தெரிவித்தார். மன அழுத்தம், சர்க்கரை நோய், நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் சிறப்பு யோகா பயிற்சி இங்கு வழங்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், கோபம், விரக்தி போன்றவற்றை தவிர்க்கும் வகையில் மன ரீதியான முன்னேற்றம் தரும் வகையில் மனதை சிறப்பாக கையாளும் வகையில் பயிற்சி தரப்படுவதாகவும் இந்த பயிற்சி பெண்களுக்காக முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் 86107 79271, 97894 17122 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அப்போது தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது ஆலயம் அறக்கட்டளை வளாகத்தில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் 800 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு இலவசமாக வேட்டி, சேலை, பட்டாசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆலயம் அறக்கட்டளை தலைவர் சந்திரசேகர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.