கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 82வது வார்டு, சாமியார் புதுவீதி பகுதியில் 10 அடி அகலம் கொண்ட சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும், மக்களும் விபத்து ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட 82வது வார்டு, சாமியார் புதுவீதி பகுதியில் 10 அடி அகலம் கொண்ட சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கும், மக்களும் விபத்து ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 82வது வார்டு, சாமியார் புதுவீதி பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீதியில் 10 அடி அகலம் கொண்ட சாலையில் எதிர் எதிர்புறம் வீடுகள் அமைந்துள்ளன. உக்கடம் கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு, ஜி.எம்.நகர், கோட்டைப்புதூர், அண்ணாநகர், கரும்புக்கடை மற்றும் பைபாஸ் பகுதிகளில் இருந்து காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணி முதல் 6 மணி வரை பெரிய கடை வீதி ரோட்டின் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு மிகவும் வேகமாக வாகனங்கள் செல்கின்றன.
இதனால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கும், தெருவில் நடந்து வரும் குழந்தைகளுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் உள்ள மிகக்குறுகிய சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் நாங்கள் தெருவை கடக்க மிகுந்த சிரமப்படுவதாகவும் மெதுவாக செல்லுங்கள் என்று கூறினால் தகராறு செய்வதாக கூறினார்.

மேலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேகத்தடை அமைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவதற்குள் மாநகராட்சி நிர்வாகம் வேகத்தடை அமைத்து, வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 82வது வார்டு, சாமியார் புதுவீதி பகுதியில் சுமார் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீதியில் 10 அடி அகலம் கொண்ட சாலையில் எதிர் எதிர்புறம் வீடுகள் அமைந்துள்ளன. உக்கடம் கோட்டை மேடு, வின்சென்ட் ரோடு, ஜி.எம்.நகர், கோட்டைப்புதூர், அண்ணாநகர், கரும்புக்கடை மற்றும் பைபாஸ் பகுதிகளில் இருந்து காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை 3 மணி முதல் 6 மணி வரை பெரிய கடை வீதி ரோட்டின் பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு மிகவும் வேகமாக வாகனங்கள் செல்கின்றன.
இதனால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கும், தெருவில் நடந்து வரும் குழந்தைகளுக்கும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் கூறுகையில், ‘இப்பகுதியில் உள்ள மிகக்குறுகிய சாலையில் வாகனங்கள் வேகமாக செல்வதால் நாங்கள் தெருவை கடக்க மிகுந்த சிரமப்படுவதாகவும் மெதுவாக செல்லுங்கள் என்று கூறினால் தகராறு செய்வதாக கூறினார்.

மேலும், இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேகத்தடை அமைத்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த பிரச்சினை தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
இப்பகுதியில் விபத்துகள் ஏற்படுவதற்குள் மாநகராட்சி நிர்வாகம் வேகத்தடை அமைத்து, வாகனங்களின் வேகங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.