நீலகிரி : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான மலைத் தோட்ட காய்கறிகள் சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் என கூறப்படுகிறது.
நீலகிரி :
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் அளவிலான மலைத் தோட்ட காய்கறிகள் சேதமடைந்தன. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் என கூறப்படுகிறது.
கோத்தகிரி பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், மலைக்காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, நெடுகுளா, குருக்கத்தி, காவிலோரை உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் உள்ள ஓடைகள் தூர்வாரப்படாமல் சுருங்கிவிட்டதால், மழைநீரை சேமிக்க முடியாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஓடையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதில், பெரும்பாலான தோட்டங்களில் அறுவடைக்கு தயாரான கேரட், முட்டைகோஸ் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டது. மழை ஓய்ந்த பின்பு தோட்டங்களை பராமரித்தும் விவசாயிகளால் பயிர்களை முழுமையாக பாதுகாக்க முடியாத நிலையில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஓடைகள் தூர்வாரப்படாததால், சமீபத்தில் பெய்த மழையில், சுமார், 60 ஏக்கர் பரப்பளவிலான காய்கறி தோட்டங்கள் சேதமடைந்து விட்டன. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் என கூறப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, ஓடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
கோத்தகிரி பகுதியில் தேயிலைக்கு அடுத்தபடியாக நீர் ஆதாரம் உள்ள விளை நிலங்களில், மலைக்காய்கறி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, நெடுகுளா, குருக்கத்தி, காவிலோரை உள்ளிட்ட பகுதிகளில் அதிக பரப்பளவில் மலை காய்கறிகளான கேரட், பீன்ஸ், முட்டைகோஸ், பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் உள்ள ஓடைகள் தூர்வாரப்படாமல் சுருங்கிவிட்டதால், மழைநீரை சேமிக்க முடியாத நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், கோத்தகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, ஓடையை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளன.
இதில், பெரும்பாலான தோட்டங்களில் அறுவடைக்கு தயாரான கேரட், முட்டைகோஸ் போன்ற பயிர்கள் தண்ணீரில் மூழ்கிவிட்டது. மழை ஓய்ந்த பின்பு தோட்டங்களை பராமரித்தும் விவசாயிகளால் பயிர்களை முழுமையாக பாதுகாக்க முடியாத நிலையில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது.
ஓடைகள் தூர்வாரப்படாததால், சமீபத்தில் பெய்த மழையில், சுமார், 60 ஏக்கர் பரப்பளவிலான காய்கறி தோட்டங்கள் சேதமடைந்து விட்டன. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் என கூறப்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் இருக்க, ஓடைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.