நீலகிரி : உதகை கிரசெண்ட் பள்ளி மாணவன் தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நீலகிரி : உதகை கிரசெண்ட் பள்ளி மாணவன் தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகை விவேகநந்த நகர் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஷர்மிளா. இவரது மகன் ஆலன் யோகன்(15) ஊட்டியில் உள்ள கிரசெண்ட் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மண்டல அளவிலான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தார்.

இதையடுத்து, கடந்த 19-ம் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத் ராமோஜி திரைபட நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் நாடு முழுதிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், ஆலன் யோகன் இயற்கை காட்சிகளை சிறப்பாக ஓவியம் தீட்டி முதல் பரிசை தட்டி சென்றார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் மாணவனுக்கு கோப்பையை வழங்கி கௌரவித்தார்.
தென்னிந்திய அளவில் இதுவரை யாரும் முதல் பரிசை வெல்லாத நிலையில், உதகை மாணவன் தேசிய அளவில் முதல் பரிசை வென்றதை பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து மாணவனின் தாய் ஷர்மிளா கூறுகையில், "ஆலன் சிறுவயதிலிருந்தே நன்றாக ஓவியம் வரைவான் மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றுள்ளான். ஆனால், தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் இடம் பிடித்தது பெருமையாக உள்ளது " என்று கூறினார்.
நீலகிரி மாவட்டம் உதகை விவேகநந்த நகர் பகுதியை சேர்ந்த ஆசிரியை ஷர்மிளா. இவரது மகன் ஆலன் யோகன்(15) ஊட்டியில் உள்ள கிரசெண்ட் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி சென்னையில் நடைபெற்ற மண்டல அளவிலான ஓவியப் போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தார்.

இதையடுத்து, கடந்த 19-ம் தேதி ஆந்திர மாநிலம் ஐதராபாத் ராமோஜி திரைபட நகரில் நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் நாடு முழுதிலிருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், ஆலன் யோகன் இயற்கை காட்சிகளை சிறப்பாக ஓவியம் தீட்டி முதல் பரிசை தட்டி சென்றார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் மாணவனுக்கு கோப்பையை வழங்கி கௌரவித்தார்.
தென்னிந்திய அளவில் இதுவரை யாரும் முதல் பரிசை வெல்லாத நிலையில், உதகை மாணவன் தேசிய அளவில் முதல் பரிசை வென்றதை பொதுமக்கள் பாராட்டினர். இதுகுறித்து மாணவனின் தாய் ஷர்மிளா கூறுகையில், "ஆலன் சிறுவயதிலிருந்தே நன்றாக ஓவியம் வரைவான் மாவட்ட அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் வென்றுள்ளான். ஆனால், தேசிய அளவில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதல் இடம் பிடித்தது பெருமையாக உள்ளது " என்று கூறினார்.