கோவை : ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அரசாணை நகலை எரித்து எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை : ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து, ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அரசாணை நகலை எரித்து எஸ்.ஆர்.எம்.யு தொழிற்சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் உள்ள 50 இரயில் நிலையங்கள் மற்றும் 150 அதிவிரைவு ரயில்களை தனியார் மயமாக்கும் விதமாக கடந்த 10ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சகம் அரசாணையை வெளியிட்டது. இந்த அரசாணை ரத்து செய்ய வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழிற்சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக, இன்று கோவை ரயில் நிலையத்தில் உள்ள கூட்செட் சாலையில் ரயில் நிலையம் மற்றும் ரயில்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும், கட்டாய ஓய்வூதியம் நிறுத்தப்படுவதை வலியுறுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆர்.எம்.யு மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழிற்சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மத்திய அரசின் தனியார் மயமாக்கும் அரசாணை நகலை அவர்கள் தீயிட்டு கொழுத்தி அவர்கள், மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். மேலும், கோரிக்கை மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.