விவசாயி வைத்திருந்த ரூ.50,000 பணத்தை கடித்து நாசம் செய்த எலி ; பணத்தை மாற்றி தராமல் வங்கி அதிகாரிகள் அலைக்கழிப்பு

கோவை : கோவையில் விவசாயி ஒருவர் சேமித்து வைத்திருந்த ரூ. 50,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை எலி கடித்து நாசமாக்கியதையடுத்து விவசாயியின் பணத்தை மாற்றி தர வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

கோவை : கோவையில் விவசாயி ஒருவர் சேமித்து வைத்திருந்த ரூ. 50,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக்களை எலி கடித்து நாசமாக்கியதையடுத்து விவசாயியின் பணத்தை மாற்றி தர வங்கி அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

பணப்பெட்டகங்கள் உடைய எல்லா வங்கிக் கிளைகளும் பழைய கிழிந்த, சிதைந்த ரூபாய் நோட்டுகளை எல்லா வேலை நாட்களிலும் மாற்றித் தர வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கியின் நோட்டு மாற்றும் விதிகள் 2009-ன் விதி எண் 2 (j)-ன்படி, அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், வெள்ளியங்காடு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கராஜ் தான் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த 50 ஆயிரம் ரூபாயை எலிகள் கடித்து இருந்த தனது பணத்தை மாற்ற மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஸ்டேட் வங்கிக்கு சென்றுள்ளார்.

ஆனால், வங்கி அதிகாரிகள் பணத்தை மாற்றித் தர மறுத்து விட்டனர். மேலும் பணத்தை சென்னையில் மாற்றிக் கொள்ளும்படியும் வற்புறுத்தியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த விவசாயி பணத்தை மாற்ற வேறுவழியின்றி அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.

இதுகுறித்து விவசாயி ரங்கராஜ் பேசுகையில், ''விவசாய அறுவடைக்குப் பின்னர் நான் சம்பாதித்த பணத்தை எலி கடித்துவிட்டது. இந்தப் பணத்தை உள்ளூர் வங்கிகளில் கொடுத்தேன். ஆனால், அவர்கள் வாங்க மறுத்துவிட்டார்கள்'' என்று வேதனையுடன் கூறினார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...