கோவை : கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ.6 லட்சம் வரை மோசடி செய்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனர் சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை : கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக கூறி ரூ.6 லட்சம் வரை மோசடி செய்த தனியார் டிராவல்ஸ் ஏஜென்சி நிறுவனர் சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகர் பிளமேரு ஹோப்காலேஜ் பகுதியில் உள்ள ஸ்ரீநகரில் வசித்து வரும் முத்துக்குமாரசாமி என்பவர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் அந்தமான் தீவுக்கு சுற்றுலா செல்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் கோவை காந்திபுரம் சித்தாபுதூரில் இயங்கி வரும் தனவர்ஷா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சுரேஷ்குமார் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது, சுரேஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளாக தான் இந்தியாவில் சீரடி, குளுமனாலி, அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் துபாய், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, போன்ற வெளிநாட்டிற்கும் குறைந்த செலவில் அழைத்து செல்வதாக சொல்லி நம்பிக்கை ஏற்படுத்தி ஒரு நபருக்கு ரூபாய் 40,000/ வீதம் பணம் செலுத்தும் படியும் உடனே பணம் கட்டினால் சலுகை விலையில் அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தை கூறியதால் உடனே சுரேசின் வங்கிக்கணக்கிற்கு இரண்டு தவணைகளில் ரூபாய் 3,47,500/ பணம் கட்டியதாகவும் செப்டம்பர் மாதம் 21ம் தேதியன்று நேரில் வந்து பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று சுரேஷ் கூறியுள்ளார்.
ஆனால், முத்துக்குமாரசாமி நேரில் சென்று பார்த்தபோது, தனவர்ஜா ரூர்ஸ் டிராவல்ஸ் அலுவலகம் பூட்டியிருந்ததாகவும் சுரேசுக்கும் அலுவலகத்தில் வேலை செய்த சிலரையும் செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்டபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. மேலும், தன்னைப்போல பலர் வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வதற்கு டிக்கெட் வாங்க வந்து காத்திருந்ததாகவும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரன் அவர்கள் உத்தரவின்படி, கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சுமார் 600க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வந்த நபர்கள் தாங்கள் ரூபாய் 12,500/ முதல் இரண்டு லட்சம் வரை சுற்றுலா செல்ல ரூபாய் 6 கோடிக்கும் மேல் பணம் கட்டியிருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில், மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரன் அவர்கள் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், தனவர்ஷா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் உரிமையாளர் சுரேஷ்குமார்(49), அவரது மனைவி மகேஸ்வரி(43) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகர் பிளமேரு ஹோப்காலேஜ் பகுதியில் உள்ள ஸ்ரீநகரில் வசித்து வரும் முத்துக்குமாரசாமி என்பவர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது குடும்பத்துடன் அந்தமான் தீவுக்கு சுற்றுலா செல்வதற்காக கடந்த ஏப்ரல் மாதம் கோவை காந்திபுரம் சித்தாபுதூரில் இயங்கி வரும் தனவர்ஷா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த சுரேஷ்குமார் என்பவரை அணுகியுள்ளார்.
அப்போது, சுரேஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளாக தான் இந்தியாவில் சீரடி, குளுமனாலி, அந்தமான் நிகோபர் தீவுகள் மற்றும் துபாய், சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, போன்ற வெளிநாட்டிற்கும் குறைந்த செலவில் அழைத்து செல்வதாக சொல்லி நம்பிக்கை ஏற்படுத்தி ஒரு நபருக்கு ரூபாய் 40,000/ வீதம் பணம் செலுத்தும் படியும் உடனே பணம் கட்டினால் சலுகை விலையில் அழைத்துச் செல்வதாக ஆசை வார்த்தை கூறியதால் உடனே சுரேசின் வங்கிக்கணக்கிற்கு இரண்டு தவணைகளில் ரூபாய் 3,47,500/ பணம் கட்டியதாகவும் செப்டம்பர் மாதம் 21ம் தேதியன்று நேரில் வந்து பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று சுரேஷ் கூறியுள்ளார்.
ஆனால், முத்துக்குமாரசாமி நேரில் சென்று பார்த்தபோது, தனவர்ஜா ரூர்ஸ் டிராவல்ஸ் அலுவலகம் பூட்டியிருந்ததாகவும் சுரேசுக்கும் அலுவலகத்தில் வேலை செய்த சிலரையும் செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்டபோன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது. மேலும், தன்னைப்போல பலர் வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்வதற்கு டிக்கெட் வாங்க வந்து காத்திருந்ததாகவும் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரன் அவர்கள் உத்தரவின்படி, கோவை மாநகர குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் சுமார் 600க்கும் மேற்பட்ட உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வந்த நபர்கள் தாங்கள் ரூபாய் 12,500/ முதல் இரண்டு லட்சம் வரை சுற்றுலா செல்ல ரூபாய் 6 கோடிக்கும் மேல் பணம் கட்டியிருந்தது தெரியவந்தது.
இந்த நிலையில், மாநகர காவல் ஆணையாளர் சுமித்சரன் அவர்கள் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், தனவர்ஷா டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் உரிமையாளர் சுரேஷ்குமார்(49), அவரது மனைவி மகேஸ்வரி(43) ஆகியோரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.