கோவை : ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுபடுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா கோவை வ.ஊ.சி மைதானத்தில் ஏ.டி.எஸ் கொசு வடிவில் பட்டங்களை பறக்க விட்டார்.
கோவை : ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை கட்டுபடுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா கோவை வ.ஊ.சி மைதானத்தில் ஏ.டி.எஸ் கொசு வடிவில் பட்டங்களை பறக்க விட்டார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார்.
மேலும், சிறிய அளவிலான உலக கோப்பை, எம் ஜி ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம் ஜி ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.
இந்நிலையில், தற்போது ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் டெங்குகாய்ச்சல் பரவுவதை கட்டுபடுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பட்டங்களை பறக்க விட்டார்.
கோவை வ.ஊ.சி மைதானத்தில் பட்டங்களை பறக்க விட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு அறிவிக்கும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்றுவதில்லை எனவும் டெங்கு கொசுக்கள் மூலம் ஏற்படுத்தும் பாதிப்புகள் மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டெங்கு கொசுக்கள் போல் வடிவமைத்து வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களை பறக்க விட்டதாக தெரிவித்தார். மேலும், மக்கள் மனது வைத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி ராஜா, அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வடிவங்களில் சிற்பங்கள் செய்வது வழக்கம். மைக்ரோ அளவில் தங்கத்தின் மூலம் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு விளையாட்டு வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வண்ணம் காளைகளை வடிவமைத்திருந்தார்.
மேலும், சிறிய அளவிலான உலக கோப்பை, எம் ஜி ஆர் நூற்றாண்டை முன்னிட்டு எம் ஜி ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார்.
இந்நிலையில், தற்போது ஏ.டி.எஸ் கொசுக்கள் மூலம் டெங்குகாய்ச்சல் பரவுவதை கட்டுபடுத்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பட்டங்களை பறக்க விட்டார்.
கோவை வ.ஊ.சி மைதானத்தில் பட்டங்களை பறக்க விட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு அறிவிக்கும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை பொதுமக்கள் சரியாக பின்பற்றுவதில்லை எனவும் டெங்கு கொசுக்கள் மூலம் ஏற்படுத்தும் பாதிப்புகள் மக்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த டெங்கு கொசுக்கள் போல் வடிவமைத்து வாசகங்கள் எழுதப்பட்ட பட்டங்களை பறக்க விட்டதாக தெரிவித்தார். மேலும், மக்கள் மனது வைத்தால் மட்டுமே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.