கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்கள் இயக்க கோரி கையெழுத்து இயக்கம்

கோவை : கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை மீண்டும் இயக்க கோரி, ரயில்வே போராட்டக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

கோவை : கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில்களை மீண்டும் இயக்க கோரி, ரயில்வே போராட்டக்குழு சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.



கோவை பொள்ளாச்சி இடையேயான அகல ரயில் பாதை பணிகள் காரணமாகக் கோவையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. பணிகள் நிறைவடைந்து பொள்ளாச்சி இரயில் பாதையில் சேவை துவங்கிய நிலையில், தென் மாவட்டங்களுக்கான ரயில்கள் இயக்கப்பட வில்லை. 

இந்நிலையில், தென் மாவட்டங்களுக்கான ரயில் சேவைகளை மீண்டும் இயக்க கோரி போராட்டம் நடத்துவது தொடர்பாக கடந்த வாரம் ரயில்வே போராட்ட குழு கூடி ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அதில், இக்கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக கையெழுத்து இயக்கம் நடத்துவது, அடுத்த கட்டமாக ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. 



அதன்படி, கோவை கோவை ரயில் நிலையத்தில் தென்மாவட்டங்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க கோரி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். 



மேலும், ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் பயணிகளிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்து பெறப்பட்டது. இதுகுறித்து போராட்டக் குழுவினர் கூறுகையில், முதல்கட்டமாக கையெழுத்து இயக்கம் நடைபெற்றுள்ளதாகவும், தங்களுடைய போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்கவில்லை எனில் அடுத்த கட்டமாக ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...