கோவை : வால்பாறையில் காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை : வால்பாறையில் காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது நல்லமுடி தேயிலைத் தோட்டம். இங்குள்ள தேயிலை தோட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்க இயலாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், தேயிலை தோட்ட நிர்வாகம் காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்தனர். பல மணி நேர போராட்டத்திற்குப்பின் இரண்டு காட்டு யானைகளை தவிர மற்ற காட்டு யானைகள் அங்கிருந்து நகர்ந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நின்று கொண்டன. தேயிலை தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை மற்றும் அதன் இரண்டு வயது குட்டியை கண்காணித்தபோது குட்டி யானையின் காலில் கட்டி இருப்பதால் அதனால் நடக்க முடியாத நிலை இருப்பது தெரிய வந்தது.

கடந்த ஒரு வார காலமாக அந்த யானை குட்டியுடன் அப்பகுதியிலேயே இருப்பதால் கொழுந்து பறிக்கும் பணிகள் பாதிப்படைகின்றன. மேலும், காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானைக்கு உடனடியாக வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து குட்டி யானையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது நல்லமுடி தேயிலைத் தோட்டம். இங்குள்ள தேயிலை தோட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் கொழுந்து பறிக்க இயலாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், தேயிலை தோட்ட நிர்வாகம் காட்டு யானைகளை விரட்ட முயற்சி செய்தனர். பல மணி நேர போராட்டத்திற்குப்பின் இரண்டு காட்டு யானைகளை தவிர மற்ற காட்டு யானைகள் அங்கிருந்து நகர்ந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் நின்று கொண்டன. தேயிலை தோட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை மற்றும் அதன் இரண்டு வயது குட்டியை கண்காணித்தபோது குட்டி யானையின் காலில் கட்டி இருப்பதால் அதனால் நடக்க முடியாத நிலை இருப்பது தெரிய வந்தது.

கடந்த ஒரு வார காலமாக அந்த யானை குட்டியுடன் அப்பகுதியிலேயே இருப்பதால் கொழுந்து பறிக்கும் பணிகள் பாதிப்படைகின்றன. மேலும், காலில் கட்டியால் பாதிக்கப்பட்டுள்ள குட்டி யானைக்கு உடனடியாக வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்து குட்டி யானையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.