கோவை : திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சையத். இவர் இன்று காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் கோவை மாவட்டம் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி சென்றார். அப்போது மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ஜெ.ஜெ.நகர் பகுதியில் சென்ற போது மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சிமெண்ட் லாரி ஒன்று அன்னூர் நோக்கி எதிரே வந்தது. சையத் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில், மழை ஈரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதி விபத்துள்ளானது.
கோவை : திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சையத். இவர் இன்று காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் கோவை மாவட்டம் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை வழியாக ஊட்டி சென்றார். அப்போது மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் உள்ள ஜெ.ஜெ.நகர் பகுதியில் சென்ற போது மேட்டுப்பாளையம் பகுதியில் இருந்து சிமெண்ட் லாரி ஒன்று அன்னூர் நோக்கி எதிரே வந்தது. சையத் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற நிலையில், மழை ஈரம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து லாரியில் மோதி விபத்துள்ளானது.

அதில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீ பற்றியது. தீ மளமளவென பரவியதால் இருசக்கர வாகனமும், லாரியும் தீயில் கருகியது. இரு சக்கர வாகனத்தோடு சேர்த்து சையத்தும் உடல் கருகி உயிரிழந்தார். லாரி ஒட்டுநர் வெளியே லாரியில் இருந்து குதித்து ஒடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதில் இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீ பற்றியது. தீ மளமளவென பரவியதால் இருசக்கர வாகனமும், லாரியும் தீயில் கருகியது. இரு சக்கர வாகனத்தோடு சேர்த்து சையத்தும் உடல் கருகி உயிரிழந்தார். லாரி ஒட்டுநர் வெளியே லாரியில் இருந்து குதித்து ஒடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்து குறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.