கோவை : புரட்டாசி மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் களைக்கட்டிய அன்னூர் ஆட்டு சந்தையில் அதிக அளவில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்ததால் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது.
கோவை : புரட்டாசி மாதம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் களைக்கட்டிய அன்னூர் ஆட்டு சந்தையில் அதிக அளவில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் குவிந்ததால் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதி அதிக அளவில் கிராமங்களையும் விவசாய நிலங்களையும் கொண்ட பகுதி. இங்கு கால்நடை வளர்ப்பு என்பது அதிக அளவில் இருந்து வருகிறது.
வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்பு மற்றும் நாட்டு கோழிகள் என்பது இந்த பகுதிகளில் அதிக அளவில் இருப்பதால் அவைகளைச் சந்தைப்படுத்தும் ஆட்டு சந்தை வாரந்தோறும் அன்னூரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகளை பெரும்பாலான மக்கள் தவிர்த்து வந்தனர். இதனால் புரட்டாசி மாதம் துவங்கிய முதல் ஆட்டு சந்தையில் இருந்து வியாபாரம் மந்தமாக இருந்து வந்தது.
இதனால் கால்நடைகள் வியாபாரம் இன்றி அன்னூர் சந்தை காணப்பட்டு வந்த நிலையில், தற்போது ஐப்பசி மாதம் பிறந்தவுடன் அன்னூர் ஆட்டு சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அத்துடன் ஆடுகளை வாங்க வியாபாரிகளும் ஒரு மாதத்திற்குப் பின்னர் குவிந்துள்ளதால் அன்னூர் ஆட்டு சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே கூடிய இந்த ஆட்டுச் சந்தைக்கு தமிழகத்தின் அன்னூர், புளியம்பட்டி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.
தலையில் அதீத முறுக்கு கொண்ட செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது. ஐந்தாயிரம் ரூபாயில் துவங்கி அதிகபட்சமாக 20,000 வரை ஒரு ஆடு விலை நிர்ணயம் செய்து விற்பனையானது. இந்த சந்தையில் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை வாங்கி சென்றனர்.
ஒரு மாத இடைவேளைக்குப் பின் இன்று கூடிய ஆட்டு சந்தையில் ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் அன்னூர் பகுதி அதிக அளவில் கிராமங்களையும் விவசாய நிலங்களையும் கொண்ட பகுதி. இங்கு கால்நடை வளர்ப்பு என்பது அதிக அளவில் இருந்து வருகிறது.
வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வளர்ப்பு மற்றும் நாட்டு கோழிகள் என்பது இந்த பகுதிகளில் அதிக அளவில் இருப்பதால் அவைகளைச் சந்தைப்படுத்தும் ஆட்டு சந்தை வாரந்தோறும் அன்னூரில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த ஒரு மாத காலமாக புரட்டாசி மாதம் என்பதால் அசைவ உணவுகளை பெரும்பாலான மக்கள் தவிர்த்து வந்தனர். இதனால் புரட்டாசி மாதம் துவங்கிய முதல் ஆட்டு சந்தையில் இருந்து வியாபாரம் மந்தமாக இருந்து வந்தது.
இதனால் கால்நடைகள் வியாபாரம் இன்றி அன்னூர் சந்தை காணப்பட்டு வந்த நிலையில், தற்போது ஐப்பசி மாதம் பிறந்தவுடன் அன்னூர் ஆட்டு சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அத்துடன் ஆடுகளை வாங்க வியாபாரிகளும் ஒரு மாதத்திற்குப் பின்னர் குவிந்துள்ளதால் அன்னூர் ஆட்டு சந்தை களைகட்டியது. அதிகாலை முதலே கூடிய இந்த ஆட்டுச் சந்தைக்கு தமிழகத்தின் அன்னூர், புளியம்பட்டி மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.
தலையில் அதீத முறுக்கு கொண்ட செம்மறி ஆடுகள் அதிக அளவில் விற்பனையானது. ஐந்தாயிரம் ரூபாயில் துவங்கி அதிகபட்சமாக 20,000 வரை ஒரு ஆடு விலை நிர்ணயம் செய்து விற்பனையானது. இந்த சந்தையில் கோவை, திருப்பூர், நீலகிரி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து வந்திருந்தவர்கள் வியாபாரிகள் அதிக அளவில் ஆடுகளை வாங்கி சென்றனர்.
ஒரு மாத இடைவேளைக்குப் பின் இன்று கூடிய ஆட்டு சந்தையில் ஒரு நாளில் மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. இதனால் கால்நடை வளர்ப்போர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.