கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவின் பேரில், சுகாதாரமற்ற நிலையில் உள்ள இடங்களை, துப்புரவு தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக சுத்தம் செய்தனர்.
கோவை : கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கு.ராசாமணி உத்தரவின் பேரில், சுகாதாரமற்ற நிலையில் உள்ள இடங்களை, துப்புரவு தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக சுத்தம் செய்தனர்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் மழை நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தி அதிகரிப்பு, சுகாதார சீர்கெடு, துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழிவு நீர் தொட்டி ஒன்று திறந்து அதிலிருந்து துர்நாற்றம் வீசியது. மேலும், அதன் அருகில் சென்று பார்த்த போது அதில் ஏராளமான கொசு புழுக்கள் இருந்தன. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதே போல், நடைபாதையின் அருகில் ஒரு எலி இறந்து கிடந்தது. இது மக்களால் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, ஆட்சியர் ராசாமணியின் உத்தரவின் பேரில், சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, சுகாதாரமற்ற நிலையில் உள்ள பகுதிகளை துப்புரவு தொழிலாளர்களைக் கொண்டு தூய்மை பணியில் நேற்று ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் தூய்மை பனியில் துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.