கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி பலி?

கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை : கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை புலியகுளம் அருகே உள்ள பெரிய நகர் பகுதியைச் சேர்ந்த பாபுவின் மகள் தீபிகா (10). இவர் மருதூர் மாநகராட்சி துவக்க பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இவர் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார். இப்படியிருக்க சிகிச்சைக்காக கடந்த 16 ஆம் தேதி உறவினர்களால் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்று காலை சுமார் 8 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

 மேலும் காய்ச்சல் பாதிப்பினால் மாணவி உயிரிழந்ததையடுத்து மாநகராட்சி பணியாளர்கள் சிறுமியின் வீட்டருகே மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அவர் டெங்கு காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்ததாக சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...