சிவானந்தபுரம் பகுதியில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீரில் கப்பல் விடும் நூதன போராட்டம்; மந்த நிலையில் செயல்படும் கோவை மாநகராட்சி - மக்கள் குற்றச்சாட்டு

கோவை : கோவையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டபட்ட சாலைகள் சரிவர மூடாமலும் சாலையில் பயணிக்கு பொதுமக்கள் கடும் அவதி பட்டு வருகின்றனர்.

கோவை : கோவையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் பாதாள சாக்கடை அமைக்க தோண்டபட்ட சாலைகள் சரிவர மூடாமலும் சாலையில் பயணிக்கு பொதுமக்கள் கடும் அவதி பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிவானந்தபுரம் பகுதியில் சாலை சரிவர இல்லாததால் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. மேலும், இன்று காலை கூட அவ்வழியே வந்த முதியவர்களான கணவன் மனைவி இருவரும் தேங்கிய தண்ணீரால் தவறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 



இந்தநிலையில், சாலை அமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தேங்கிய மழை நீரில் காகித கப்பல் விடும் நூதன போராட்டத்தில் இன்று மாலை ஈடுபட்டனர். 

மேலும் அவர்கள் கூறுகையில் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் தரமான சாலை அமைத்திட நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் அவர்கள் கூறுகையில், கோவை கணபதி அடுத்த சிவானந்தபுரம் பகுதியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மூன்றாவது வீதியில் கடந்த 2008ம் ஆண்டிற்கு பிறகு சாலை அமைக்கபடவில்லை எனவும் மின்வாரிய அலுவலகம் மற்றும் தபால் அலுவலகம் இப்பகுதியில் தான் அமைந்துள்ளது எனவும், அடிப்படை வசதியான சாலை சரிவர இல்லாததால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து அல்லோலப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...