கோவை : கோவையில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையான கே.எம்.சி.எச்சில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : கோவையில் செயல்பட்டு வரும் பிரபல மருத்துவமனையான கே.எம்.சி.எச்சில் நோயாளிக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, வீட்டில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளையே அவர்களுக்கு வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், கோவை அவினாசி சாலையில் சித்ரா பகுதியில் இயங்கி வரும் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்த போது உணவை மாற்றிக்கொடுப்பதாகவும் இப்பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இது தொடர்பாக நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மருத்துவமனை உணவக தயாரிப்பு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் வேளாண் உணவுப் பொருட்களான தக்காளியில் புழுக்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக பேசிய மாவட்ட உணவு பாதுகாப்பு நல அலுவலர் தமிழ்செல்வன், ஆய்வின் அடிப்படையில் இனிமேல் உணவு தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும் என மருத்துவமனை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். மீண்டும் இது போன்ற புகார்கள் வந்தால் அதன் பேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு பணம் முக்கியம் என்றாலும் உணவிலும் பணம் பார்க்க, தரத்தை கைவிட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தை நோயாளிகளிடம் ஏற்படுத்தியிருக்கும் இது மாதிரியான சம்பவம், இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு, வீட்டில் இருந்து உணவு கொண்டு வர அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு மாற்றாக, மருத்துவமனையில் உள்ள உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகளையே அவர்களுக்கு வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், கோவை அவினாசி சாலையில் சித்ரா பகுதியில் இயங்கி வரும் கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருப்பதை கண்ட அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்த போது உணவை மாற்றிக்கொடுப்பதாகவும் இப்பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே, இது தொடர்பாக நோயாளியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மருத்துவமனை உணவக தயாரிப்பு கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையலுக்குப் பயன்படுத்தப்படும் வேளாண் உணவுப் பொருட்களான தக்காளியில் புழுக்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக பேசிய மாவட்ட உணவு பாதுகாப்பு நல அலுவலர் தமிழ்செல்வன், ஆய்வின் அடிப்படையில் இனிமேல் உணவு தயாரிக்கப்படும் பொருட்களின் தரத்தை ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும் என மருத்துவமனை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். மீண்டும் இது போன்ற புகார்கள் வந்தால் அதன் பேரில் நோட்டீஸ் வழங்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு பணம் முக்கியம் என்றாலும் உணவிலும் பணம் பார்க்க, தரத்தை கைவிட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தை நோயாளிகளிடம் ஏற்படுத்தியிருக்கும் இது மாதிரியான சம்பவம், இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.