கோவை : கோவையில் இயங்கி வரும் கேரளா கல்சுரல் அறக்கட்டளை மற்றும் திருச்சூர் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து 'இயற்கை சீற்றம் மற்றும் உயிர்வாழ்வு' புகைப்பட கண்காட்சியை கோவை அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை அரங்கில் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடத்துகிறது.
கோவை : கோவையில் இயங்கி வரும் கேரளா கல்சுரல் அறக்கட்டளை மற்றும் திருச்சூர் பத்திரிகையாளர் சங்கம் இணைந்து 'இயற்கை சீற்றம் மற்றும் உயிர்வாழ்வு' புகைப்பட கண்காட்சியை கோவை அவினாசி சாலையில் உள்ள கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை அரங்கில் அக்டோபர் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடத்துகிறது.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. அப்போது, கேரள கல்சுரல் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் விசாகன் பேசுகையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வீடுகள், தங்களது உடைமைகளை இழந்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டதாகவும் அவர்களுக்கு பல தரப்பட்ட மக்கள் உதவிக்கரம் நீட்டியதாக கூறிய அவர், இந்த மழையால் ஏற்பட்ட சேதங்களை பத்திரிகையாளர்கள் எடுத்து அரிய புகைபடங்களை கண்காட்சியில் வைக்கப்பட உள்ளத்காக தெரிவித்தார்.
மேலும், இந்த கண்காட்சி இயற்கை பேரழிவின் தாக்கத்தை மக்கள் எதிர் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தும் விதமாக அமையும் என தெரிவித்தார். இந்த கண்காட்சியை நாளை மற்றும் நாளைய மறுதினம் நடக்க உள்ளதாகவும், கேரள புகைப்பட கலைஞர்களால் எடுக்கப்பட்ட 110 அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் 5,000 மேற்பட்டோர் கண்காட்சியை காண வருவார்கள் என எதிர்பார்பதகாக தெரிவித்த அவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மும்பை மற்றும் கொல்கத்தாவில் கண்காட்சி நடைபெற்றதாகவும் இந்த கண்காட்சியை கோவை 105 அதிவிரைவு படை கமாண்டர் ஜெயகிருஷ்ணன் துவக்கி வைக்க உள்ளதாகவும் கண்காட்சியில் இடம் பெற்ற புகைபடங்களுக்கு சிறந்த caption எழுதும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேரளா கல்சுரல் டிரஸ்ட் துணை தலைவர் மோகன் குமார், இணை செயலாளர் மனோஜ் மற்றும் கலை பிரிவு செயலாளர் ஜோட்டி குமார் உடன் இருந்தனர்.

இது குறித்த பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. அப்போது, கேரள கல்சுரல் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் விசாகன் பேசுகையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கேரளாவில் பெய்த கனமழை காரணமாக வீடுகள், தங்களது உடைமைகளை இழந்து பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டதாகவும் அவர்களுக்கு பல தரப்பட்ட மக்கள் உதவிக்கரம் நீட்டியதாக கூறிய அவர், இந்த மழையால் ஏற்பட்ட சேதங்களை பத்திரிகையாளர்கள் எடுத்து அரிய புகைபடங்களை கண்காட்சியில் வைக்கப்பட உள்ளத்காக தெரிவித்தார்.
மேலும், இந்த கண்காட்சி இயற்கை பேரழிவின் தாக்கத்தை மக்கள் எதிர் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வலியுறுத்தும் விதமாக அமையும் என தெரிவித்தார். இந்த கண்காட்சியை நாளை மற்றும் நாளைய மறுதினம் நடக்க உள்ளதாகவும், கேரள புகைப்பட கலைஞர்களால் எடுக்கப்பட்ட 110 அரிய புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதாகவும் 5,000 மேற்பட்டோர் கண்காட்சியை காண வருவார்கள் என எதிர்பார்பதகாக தெரிவித்த அவர், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மும்பை மற்றும் கொல்கத்தாவில் கண்காட்சி நடைபெற்றதாகவும் இந்த கண்காட்சியை கோவை 105 அதிவிரைவு படை கமாண்டர் ஜெயகிருஷ்ணன் துவக்கி வைக்க உள்ளதாகவும் கண்காட்சியில் இடம் பெற்ற புகைபடங்களுக்கு சிறந்த caption எழுதும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேரளா கல்சுரல் டிரஸ்ட் துணை தலைவர் மோகன் குமார், இணை செயலாளர் மனோஜ் மற்றும் கலை பிரிவு செயலாளர் ஜோட்டி குமார் உடன் இருந்தனர்.