பாகிஸ்தான் அணுசக்தி மையத்தை தகர்க்க முயன்ற 8 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

லாகூர்: பாகிஸ்தானில் அணுசக்தி மையம் மற்றும் புலனாய்வு நிறுவனத்தை தகர்க்க பதுங்கியிருந்த அல்கொய்தா மற்றும் தலிபான் தீவிரவாதிகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது முல்தான் மாவட்டம். இங்குள்ள சுஜாபாத் பகுதியில் அணுசக்தி மையம் மற்றும் புலனாய்வு அமைப்பு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் சந்தேகத்துக்கு இடமான சிலர் அந்த பகுதியில் பதுங்கியிருப்பதாக பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிரவாத எதிர்ப்பு பிரிவு போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். துப்பாக்கி சூட்டில் 8 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தாக்குதலில் இறந்தவர்கள் தடை செய்யப்பட்ட அல்கொய்தா மற்றும் தெஹ்ரி இ தலிபான் தீவிரவாதிகள் என தெரியவந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...