கோவை : தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்யும் உணவுப் பொருட்களில் தரமில்லை என்றால் பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலம் புகார் கொடுக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
கோவை : தீபாவளி பண்டிகைக்கு விற்பனை செய்யும் உணவுப் பொருட்களில் தரமில்லை என்றால் பொதுமக்கள் வாட்ஸ்அப் மூலம் புகார் கொடுக்கலாம் என்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் சார்பில் விஜய் பார்க் இன் ஹோட்டலில் இனிப்பு காரம் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தீபாவளி விற்பனைக்கு இனிப்பு கார வகைகள் தரமாக தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என உணவு பாதுகாப்புத் துறை சார்பில் அறிவுரை வழங்கப்பட்டது.

அதேபோல, கூடுதல் நிறமிகள் சேர்க்கப்படக்கூடாது, பயன்படுத்திய எண்ணெய்களை மீண்டும் பயன்படுத்தப்படுத்த கூடாது உள்ளிட்ட பல உணவு பாதுகாப்பு வழிமுறைகளை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இனிப்பு காரம் தயாரிப்பாளர்களுக்கு ஆலோசனைகளாக வழங்கினர்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதுடன் பலகாரங்கள் தயாரிக்கும் தொழிலாளர் கைகளை நன்றாக கழுவிய பின்னர் சமைக்கவேண்டும் எனவும் கண்டிப்பாக இனிப்பு மற்றும் கார வகை தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று இருக்க வேண்டும் எனவும் இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தமிழ்ச்செல்வன் பேசுகையில்;-

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கார விற்பனையாளர்கள் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்றும், உணவு பாதுகாப்புத் துறை சார்பில் தீபாவளி தொடங்கும்வரை விற்பனை மையங்கள் மற்றும் தயாரிப்பு மையங்களில் திடீர் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க பொதுமக்கள் 94440 42322 என்ற எண்ணிற்கு தங்களது புகாரினை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.