கோவை : கோவையில் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத மானிய விலையில் விதைகளைக் கொடுக்க வேண்டும் என கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : கோவையில் மஞ்சள் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத மானிய விலையில் விதைகளைக் கொடுக்க வேண்டும் என கோரி விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான புறநகர் பகுதிகளில் மஞ்சள் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் மஞ்சள் விவசாய பரப்பு பல ஆயிரம் ஏக்கரில் இருந்து சில நூறு ஏக்கர்களாக குறைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
மஞ்சள் குவிண்டாலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ 5500 முதல் 8500 ரூபாயாக இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களில் விலைகள் 6500 ரூபாயாக குறைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மஞ்சள் விவசாயத்தை ஊக்குவிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மஞ்சளை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம் என விதி இருந்தாலும் அதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை இருப்பதாக கூறிய அவர்கள் விற்பனை கூடங்களில் போதிய இருப்பு வைக்கும் வசதிகள் இல்லாததே இதற்கு காரணம் எனவும் இப்பிரச்சனையை தீர்க்க 100 சதவீத மானிய விலையில் மஞ்சள் விதைகள் தருவதோடு, உற்பத்தி செலவீனங்களை அரசே முழுமையாக ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோவை மாவட்டத்தின் பெரும்பாலான புறநகர் பகுதிகளில் மஞ்சள் விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் மஞ்சள் விவசாய பரப்பு பல ஆயிரம் ஏக்கரில் இருந்து சில நூறு ஏக்கர்களாக குறைந்துள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர்.
மஞ்சள் குவிண்டாலுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ 5500 முதல் 8500 ரூபாயாக இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களில் விலைகள் 6500 ரூபாயாக குறைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மஞ்சள் விவசாயத்தை ஊக்குவிக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் மஞ்சளை இருப்பு வைத்து பொருளீட்டு கடன் பெறலாம் என விதி இருந்தாலும் அதனை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலை இருப்பதாக கூறிய அவர்கள் விற்பனை கூடங்களில் போதிய இருப்பு வைக்கும் வசதிகள் இல்லாததே இதற்கு காரணம் எனவும் இப்பிரச்சனையை தீர்க்க 100 சதவீத மானிய விலையில் மஞ்சள் விதைகள் தருவதோடு, உற்பத்தி செலவீனங்களை அரசே முழுமையாக ஏற்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.