கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களின் தலைமையில் அலுவலர்கள், பொறியாளாகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கோவை : கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் அவர்களின் தலைமையில் அலுவலர்கள், பொறியாளாகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நடைபெற்று வருகின்ற வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் கலந்தாய்வு மேற்கொண்டார்.
சாலைப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் வசதியினை சீராக்கிடவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள், மின்விளக்கு வசதிகள், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களின் செயல்பாடுகள் (Micro Composing Centre) மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் செயல்பாடுகள் ஆகிய பணிகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை துரிதமாகவும், தரமாகவும் விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள், பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி ஆணையாளர்கள் டி.ஆர்.ரவி, செந்தில்குமார்ரத்தினம், மகேஷ்கனகராஜ், ஏ.ஜெ.செந்தில் அரசன், ம.செல்வன், மேற்கு மண்டல செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், செயற்பொறியாள்கள் சரவணக்குமார், பார்வதி மற்றும் அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் நடைபெற்று வருகின்ற வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றம் குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் அவர்கள் கலந்தாய்வு மேற்கொண்டார்.
சாலைப்பணிகள், பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் வசதியினை சீராக்கிடவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள், மின்விளக்கு வசதிகள், நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையங்களின் செயல்பாடுகள் (Micro Composing Centre) மற்றும் ஆழ்குழாய் கிணறுகளின் செயல்பாடுகள் ஆகிய பணிகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷரவன்குமார் ஜடாவத் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை துரிதமாகவும், தரமாகவும் விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள், பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், உதவி ஆணையாளர்கள் டி.ஆர்.ரவி, செந்தில்குமார்ரத்தினம், மகேஷ்கனகராஜ், ஏ.ஜெ.செந்தில் அரசன், ம.செல்வன், மேற்கு மண்டல செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன், செயற்பொறியாள்கள் சரவணக்குமார், பார்வதி மற்றும் அலுவலர்கள், பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.