கோவை : அரசு ஊழியர் சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை : அரசு ஊழியர் சங்க தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம், மாநில துணைத்தலைவர் கரூர் சுப்பிரமணியம் தற்காலிக பணிநீக்கம், கோவை மாவட்டத்தில் டிஎன்ஜிஏ மாவட்ட தலைவர் செந்தில் குமார், மாவட்ட துணைத தலைவர் முத்துராஜ், வட்ட நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன், ராமமூர்த்தி உள்ளிட்டவர்களை ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மாவட்ட இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பழிவாங்கும் நடவடிக்கை கைவிட வேண்டும், மாநில துணைத்தலைவரின் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், மாவட்ட இடமாறுதல் செய்யப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை மீண்டும் கோவை மாவட்டத்திலேயே பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சதிஷ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு செய்தனர். இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத்தலைவர் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணிநீக்கம், மாநில துணைத்தலைவர் கரூர் சுப்பிரமணியம் தற்காலிக பணிநீக்கம், கோவை மாவட்டத்தில் டிஎன்ஜிஏ மாவட்ட தலைவர் செந்தில் குமார், மாவட்ட துணைத தலைவர் முத்துராஜ், வட்ட நிர்வாகிகள் ஸ்ரீனிவாசன், ராமமூர்த்தி உள்ளிட்டவர்களை ஜேக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக மாவட்ட இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பழிவாங்கும் நடவடிக்கை கைவிட வேண்டும், மாநில துணைத்தலைவரின் தற்காலிக பணிநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், மாவட்ட இடமாறுதல் செய்யப்பட்ட கோவை மாவட்ட நிர்வாகிகளை மீண்டும் கோவை மாவட்டத்திலேயே பணியமர்த்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சதிஷ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையீடு செய்தனர். இதில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்று அரசின் நடவடிக்கைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.