உதகை மலை ரயில் நிலையத்தில் வரையப்பட்டுள்ள பழங்குடியினத்தவரின் வாழ்க்கை முறை

நீலகிரி : சர்வதேச அளவில் புகழ்பெற்ற உதகை மலை ரயில் நிலையத்தில், நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தவரின் வாழ்க்கை முறை வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நீலகிரி : சர்வதேச அளவில் புகழ்பெற்ற உதகை மலை ரயில் நிலையத்தில், நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினத்தவரின் வாழ்க்கை முறை வரையப்பட்டுள்ள ஓவியங்கள் சுற்றுலா பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் பாதையில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவர். மேலும், மலை ரயில் பாதையில் சுரங்கப் பாதைகள், பள்ளத்தாக்கு காட்சிகள் மற்றும் தேயிலை தோட்டக்காட்சிகள் என பல்வேறு இயற்கை காட்சிகளை ரசித்து செல்ல இந்த மலை ரயிலில் பயணம் செய்வர்.



இந்நிலையில், சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்கும் உதகை ரயில் நிலையத்தில், தற்போது நீலகிரி மாவட்டத்தில் வாழ்ந்து வரும் பழங்குடி இனத்தவர்களான தோடர் இனத்தவர்களின் வாழ்க்கை முறைகளை விளக்கும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இதில் தோடர்களின் பழங்கால வீடுகள் மற்றும் விவசாயம் சார்ந்தவற்றை ஓவியங்களாக வரைந்துள்ளதை உள்ளூர் மக்கள் மட்டுமன்றி மலைரயில் நிலையத்திற்கு வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.



பாரம்பரிய மிக்க மலை ரயில் நிலையத்தில் மலை மாவட்டத்தின் பெருமையை போற்றும் பாரம்பரிய ஓவியங்களையும் சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து செல்வது கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...