மேட்டுப்பாளையத்தில் பருவமழையொட்டி வழங்கப்பட்ட 60,000 விதை பந்துகள் ; ஆர்வத்துடன் வாங்கி சென்ற பொதுமக்கள்

கோவை : மேட்டுப்பாளையத்தில் பருவமழையொட்டி 60,000 விதை பந்துகள் பொதுமக்கள், மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கீரின் ஆப்பிள் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டன.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பருவமழையொட்டி 60,000 விதை பந்துகள் பொதுமக்கள், மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கீரின் ஆப்பிள் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டன.

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழையானது தொடர்ந்து இன்னும் பெய்து வருகிறது. குறிப்பாக மலையடிவார பகுதிகளாக இருக்கூடிய மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை மற்றும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. எனவே இந்த பருவமழையை பயன்படுத்தி மரங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கீரின் ஆப்பிள் என்ற தனியார் தொண்டு நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.



பருவமழைக்கு ஏற்றவாறு நாட்டு மர வகைகளான வேம்பு, வாகை, சொர்க்கமாம், மலைவேம்பு உள்ளிட்ட மரங்களின் விதைகளை விதைப்பந்துகளாக உருவாக்கி பாக்கெட்டுகளில் அடைத்து சுமார் 60,000 விதைப்பந்துகள் மக்கள் அதிகமாக கூடும் இடமான பேருந்து நிலையம் முன்பு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.

பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் விதைப்பந்துகளை வாங்கி சென்றனர். மேலும், மேட்டுப்பாளையத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் வளாகத்தில் நட இலவசமாக விதைப்பந்துகள் லழங்கபட்டன.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...