கோவை : மின் ஒப்பந்த பணியாளர்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினர் 315 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை : மின் ஒப்பந்த பணியாளர்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினர் 315 பேரை போலீசார் கைது செய்தனர்.

மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு அமைப்பினர் மாநிலம் முழுவதும் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவையில் மண்டல பொறியாளர் அலுவலக நுழைவாயில் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மண்டல செயலாளர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் மின்வாரியம் அறிவித்த தினக்கூலி 380 வழங்க வேண்டும், 5,000 கேங்க்மேன் என்ற கள உதவியாளர்கள் என மாற்றி 10,000 ஆக உயர்த்த வேண்டும், தானே, வர்தா, கஜா புயல்களின் போது மின்துறை அமைச்சர் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வயது வரம்பை ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 315 பேரை போலீசார் கைது செய்தனர்.

மின்வாரிய ஒப்பந்த பணியாளர்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு அமைப்பினர் மாநிலம் முழுவதும் இன்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக கோவையில் மண்டல பொறியாளர் அலுவலக நுழைவாயில் முன்பு நடந்த மறியல் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மண்டல செயலாளர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் மின்வாரியம் அறிவித்த தினக்கூலி 380 வழங்க வேண்டும், 5,000 கேங்க்மேன் என்ற கள உதவியாளர்கள் என மாற்றி 10,000 ஆக உயர்த்த வேண்டும், தானே, வர்தா, கஜா புயல்களின் போது மின்துறை அமைச்சர் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், 40 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், வயது வரம்பை ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டமானது நடைபெற்றது.

இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசுக்கு எதிராக பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 315 பேரை போலீசார் கைது செய்தனர்.