உலக வங்கி ஒதுக்கியுள்ள ரூ.18 கோடியில் நீலகிரி குந்தா அணையை உடனடியாக தூர்வார கோரிக்கை

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குந்தா அணையில் உள்ள ராட்சத குழாயில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி மின் உற்பத்தி தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளதால் உலக வங்கி ஒதுக்கியுள்ள 18 கோடி ரூபாய் நிதியில் டெண்டர் பணிகளை விரைந்து மேற்கொண்டு அணையில், உள்ள 60 சதவீதம் அளவுக்கு சகதிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது..

நீலகிரி : நீலகிரி மாவட்டம் குந்தா அணையில் உள்ள ராட்சத குழாயில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி மின் உற்பத்தி தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளதால் உலக வங்கி ஒதுக்கியுள்ள 18 கோடி ரூபாய் நிதியில் டெண்டர் பணிகளை விரைந்து மேற்கொண்டு அணையில், உள்ள 60 சதவீதம் அளவுக்கு சகதிகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது..



89 அடி உயரம் கொண்ட குந்தா அணையில், தேக்கி வைக்கும், தண்ணீர் மூலம் கெத்தை, பரளி, பில்லுார் உள்ளிட்ட புனல் மின் நிலையங்களில் நாள்தோறும், 455 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், குந்தா அணை முக்கிய அணையாக கருதப்படுகிறது. ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, இந்த அணை தூர்வாரப்படவில்லை. அணையை முழுமையாக தூர்வாரி நிரந்தர தீர்வு ஏற்படுத்தாததால், மழையின் போது ராட்சத குழாயில் சேறும், சகதியில் அடைப்பு ஏற்பட்டு அடிக்கடி மின் உற்பத்தி தடை ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

தற்போது, அணையில், 60 சதவீதம் அளவுக்கு சகதி நிரம்பியுள்ளது. சிறிய மழையிலேயே அணை முழு கொள்ளளவை எட்டி விடும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, குழாய்களில் சேர்ந்துள்ள சகதியை, நீர் மூலம் கரைத்து வெளியேற்றும் பணியை மின்வாரியம் மேற்கொண்டது.



இந்த தற்காலிக பராமரிப்பு பணி, தொடர்ந்து ஒரு வாரம் நீடித்தால் மட்டுமே குழாயில் சேர்ந்துள்ள அடைப்பை முழுமையாக அகற்ற முடியும். ஆனால், ஒரே நாளில் சகதி அகற்றும் பணி முடிக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி துவங்கியது. குந்தா அணை தூர்வாரும் பணிக்காக உலக வங்கி நிதியாக, 18 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டும், டெண்டர் பணி தாமதமாகி வருவதால் மின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், டெண்டர் பணியில் உள்ள சிக்கல்களை கலைந்து, விரைவில், பணிகளை துவக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...