வால்பாறையில் நியாய விலை கடையின் கதவை உடைத்து காட்டு யானைகள் அட்டகாசம் ; அச்சத்தில் பொதுமக்கள்

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் நியாய விலை கடையின் கதவு மற்றும் சுவரை உடைத்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை : கோவை மாவட்டம் வால்பாறையில் நியாய விலை கடையின் கதவு மற்றும் சுவரை உடைத்து அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். 



கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக காட்டு யானைகள் தேயிலை தோட்டப்பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இவைகள் தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. 

இந்த நிலையில், வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் எம்.டியில் இரவு குடியிருப்பு பகுதிக்குள் 3 காட்டு யானைகள் நுழைந்தன. காட்டு யானைகள் மகளிர் குழு நியாய விலை கடையின் சுவற்றை உடைத்து உள்ளே நுழைந்து அங்கிருந்த பால் பவுடர் மற்றும் மளிகை பொருட்களை சாப்பிட்டன. 



யானைகள் கடைக்குள் நுழைந்ததை பார்த்த பொதுமக்கள், தோட்ட காவலர்களோடு இணைந்து லாரி மூலம் காட்டு யானைகளை விரட்டினர். இதனால் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி பருப்பு சர்க்கரை தப்பின. இருப்பினும் கடையின் சுவர்கள் முற்றிலும் சேதமடைந்தன. 

இதனால் இன்று விநியோகிப்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நியாய விலை கடையை ஆய்வு செய்தனர். 

தொடர்ந்து, காட்டு யானைகள் அப்பகுதியிலேயே முகாமிட்டுள்ளதால் இன்று இரவும் குடியிருப்பு பகுதிக்குள் வரலாம் என்ற அச்சத்திலும் பீதியிலும் தொழிலாளர்கள் உள்ளனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...