கோவை : கோவையில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கத்தி போடும் நிகழ்ச்சியாகும்.
கோவை : கோவையில் வாழும் தெலுங்கு மொழி பேசும் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று கத்தி போடும் நிகழ்ச்சியாகும்.

விஜயதசமி தினத்தில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மனை வழிபடும் வகையிலும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தும் வகையில் தங்களது இரு கைகளிலும் கத்திகளை ஏந்தியபடி இரு கரங்களிலும் கத்தியால் வெட்டியபடி வழிபாடு நடத்துவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை கோவை சாய்பாபா காலனி, நெசவாளர் காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக கிளம்பிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் வீஸ்கோ, தீஸ்கோ என்ற பக்தி முழக்கத்துடன் ஒரு கைகளிலும் கத்தி போட்டபடி கோவை சுக்கரவார்பேட்டை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மன் கோவிலுக்கு சென்றனர். இதனை ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.

இவ்வாறு கத்தி போடுபவர்கள் விரதம் இருந்து இதனை செய்வதாகவும், இதனை செய்வதின் மூலம் தங்கள் வழிபாடுகள் நிறைவேறுவதாக மனநிறைவுடன் தெரிவித்தனர். கத்தி போடுவதால் ஏற்படும் காயங்களுக்கு அம்மனுக்குச் சாத்தப்பட்ட மஞ்சள் மற்றும் குங்குமம் மருத்துவ பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி கோவையில் மேட்டுப்பாளையம் சாலை, பாரதி பார்க் சாலை, சுக்கரவார்பேட்டை, காந்தி பார்க் சாலை உள்ளிட்டவற்றில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடியதை அடுத்து ஏராளமான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.


விஜயதசமி தினத்தில் ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மனை வழிபடும் வகையிலும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தும் வகையில் தங்களது இரு கைகளிலும் கத்திகளை ஏந்தியபடி இரு கரங்களிலும் கத்தியால் வெட்டியபடி வழிபாடு நடத்துவது வழக்கம்.

அதன் ஒரு பகுதியாக இன்று காலை கோவை சாய்பாபா காலனி, நெசவாளர் காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக கிளம்பிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிநெடுகிலும் வீஸ்கோ, தீஸ்கோ என்ற பக்தி முழக்கத்துடன் ஒரு கைகளிலும் கத்தி போட்டபடி கோவை சுக்கரவார்பேட்டை ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி புது சவுடம்மன் கோவிலுக்கு சென்றனர். இதனை ஆயிரக்கணக்கானோர் பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.

இவ்வாறு கத்தி போடுபவர்கள் விரதம் இருந்து இதனை செய்வதாகவும், இதனை செய்வதின் மூலம் தங்கள் வழிபாடுகள் நிறைவேறுவதாக மனநிறைவுடன் தெரிவித்தனர். கத்தி போடுவதால் ஏற்படும் காயங்களுக்கு அம்மனுக்குச் சாத்தப்பட்ட மஞ்சள் மற்றும் குங்குமம் மருத்துவ பிரசாதமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி கோவையில் மேட்டுப்பாளையம் சாலை, பாரதி பார்க் சாலை, சுக்கரவார்பேட்டை, காந்தி பார்க் சாலை உள்ளிட்டவற்றில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடியதை அடுத்து ஏராளமான போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
