நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணை திறக்கப்பட்டு 450 கன அடி வெளியேற்றப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அவலாஞ்சி அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணை திறக்கப்பட்டு 450 கன அடி வெளியேற்றப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள 12 அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள பைக்காரா, கிளன்மார்கன், முக்கூர்த்தி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து அணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது

அவலாஞ்சி அணை முழு கொள்ளளவான 171 அடியை இரண்டாவது முறையாக நேற்று இரவு எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 450 கன அடி நீர் திறந்து, இரண்டு மதகுகளில் படி படியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குந்தா, பில்லூர் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களும், சம வெளிப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளும் பயனடைவர். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில், அணைக்கு வரும் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரித்தனர்.

நீலகிரி மாவட்ட அணை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால், மாவட்டத்தில் உள்ள 12 அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள பைக்காரா, கிளன்மார்கன், முக்கூர்த்தி அணைகள் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து அணை திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டது

அவலாஞ்சி அணை முழு கொள்ளளவான 171 அடியை இரண்டாவது முறையாக நேற்று இரவு எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி 450 கன அடி நீர் திறந்து, இரண்டு மதகுகளில் படி படியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குந்தா, பில்லூர் போன்ற பகுதிகளில் வசிப்பவர்களும், சம வெளிப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளும் பயனடைவர். மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில், அணைக்கு வரும் உபரி நீர் தொடர்ந்து வெளியேற்றப்படும் என்று அதிகாரிகள் தெரித்தனர்.