தமிழ் மீது அளவில்லா காதல் கொண்டவர் பிரதமர் மோடி : பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்

கோவை : பிரதமர் மோடி தமிழ் மீது அளவில்லா காதல் கொண்டவர் என்றும் மோடி தமிழைத் தொட்டுவிட்டதால் அதை வைத்து அரசியல் செய்தவர்கள் இனி கெட்டு போய்விடுவோம் என பயந்துள்ளதாக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.

கோவை : பிரதமர் மோடி தமிழ் மீது அளவில்லா காதல் கொண்டவர் என்றும் மோடி தமிழைத் தொட்டுவிட்டதால் அதை வைத்து அரசியல் செய்தவர்கள் இனி கெட்டு போய்விடுவோம் என பயந்துள்ளதாக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்தார்.

கோவை பா.ஜ.க அலுவலகத்தில் நடைபெற்றது செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், காந்தியின் 150வது பிறந்தநாளையொட்டி காந்தியின் கொள்கையை வலியுறுத்தி பாதயாத்திரை நடத்த உள்ளதாகவும், கட்சி, அரசியல் சார்பற்ற ஒத்த பாதை யாத்திரையில் கட்சியின் சின்னமோ, கொடியோ இருக்காது என தெரிவித்தார். காந்தியின் கொள்கையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையிலான இந்த யாத்திரையில் நாள் ஒன்றிக்கு 5 முதல் 15 கிலோமீட்டர் நடக்க உள்ளதாகவும், ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் 15 நாட்கள் இந்த யாத்திரை நடத்தப்படும் எனக் கூறினார்.

ஐ.நாவில் தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்த பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் இருக்கும் கட்சிகளை விட தமிழின் புகழை பிரதமர் பாடுவதாகவும் கூறினார். தமிழ் நாட்டில் உள்ள கட்சிகள் தமிழை வைத்து அரசியல் செய்து ஓட்டு வாங்க முயற்சி செய்வதாகவும் ஆனால் தமிழை இதயத்தில் வைத்து தனது செயலில் தமிழை உயர்த்தி காட்டிய ஒரே பிரதமர், மோடி என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழ் மீது அளவில்லா காதல் கொண்டவர் மோடி என்றும் மோடி தமிழைத் தொட்டுவிட்டதால் அதை வைத்து அரசியல் செய்தவர்கள் இனி கெட்டு போய்விடுவோம் என பயந்துள்ளதாகவும் இதனால், பிரதமர் தமிழ் பெருமையை பேசுவதை விமர்சிக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...