கோவை : கோவையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளம் பெண்ணின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை : கோவையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இளம் பெண்ணின் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்தக் கோரி அவரது உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை அடுத்த சூலூர் பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகளான சோபனா(25) அப்பகுதியில் செயல்பட்டு வந்த லலிதா ஸ்ரீ என்ற அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி பணியிடத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் சோபனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சோபனாவின் உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு போயர் இன ஒற்றுமை சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அழகு நிலைய உரிமையாளரான லலிதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் சோபனாவை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
இதற்கு மறுத்ததால் அவர்கள் சோபனாவை கொலை செய்து தற்கொலையாக மாற்றியிருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் எனவே அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் தங்களது மனு வலியுறுத்தியிருந்தனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தங்களது கைகளில் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
கோவை அடுத்த சூலூர் பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த பத்மநாபன் என்பவரது மகளான சோபனா(25) அப்பகுதியில் செயல்பட்டு வந்த லலிதா ஸ்ரீ என்ற அழகு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி பணியிடத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் சோபனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சோபனாவின் உறவினர்கள் மற்றும் தமிழ்நாடு போயர் இன ஒற்றுமை சங்கத்தினர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் அழகு நிலைய உரிமையாளரான லலிதா மற்றும் அவரது கணவர் மணிகண்டன் ஆகியோர் சோபனாவை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
இதற்கு மறுத்ததால் அவர்கள் சோபனாவை கொலை செய்து தற்கொலையாக மாற்றியிருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகவும் எனவே அவரது மரணத்தில் உள்ள மர்மத்தை விலக்க சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர்கள் தங்களது மனு வலியுறுத்தியிருந்தனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தங்களது கைகளில் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.