திருப்பூர் : திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்து அதன் காரணமாக சிறிய அளவில் நிறுவனம் நடத்தி வந்தவர் நிறுவனத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் : திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்து அதன் காரணமாக சிறிய அளவில் நிறுவனம் நடத்தி வந்தவர் நிறுவனத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கோம்பை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் காஜா உசேன் இவர் திருப்பூர் வள்ளியம்மை நகர் பகுதியில் சிறிய அளவில் பின்னலாடை நிறுவனம் நடத்தி வருகிறார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகையால் தொழில் நலிவடைந்த சூழ்நிலையில், தற்போது சொந்தமாக நிறுவனம் நடத்துவதைக் கைவிட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியினை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணி மேற்கொண்டதிலும் தனக்குத் தேவையான அளவு ஆர்டர் கிடைக்காத விரக்தியில் இருந்து வந்துள்ளார்.
மேலும், வெளியில் கடன் பெற்று தொழில் நடத்தி வந்த சூழ்நிலையில், தற்போது கடன் கட்டமுடியாத நிலையில் விரக்தி அடைந்த காஜா உசேன் நேற்று இரவு வள்ளியம்மை நகர் பகுதியில் உள்ள தனது நிறுவனத்திலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை காஜா உசேன் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் அளித்ததை அடுத்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.