கோவையை தலைமையிடமாக கொண்டு வாலண்டியர் ஊர்காவல் படை நலசங்கம் செயல்படும் - தலைவர் ஜேசு தனபால் தகவல்

கோவை : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஊர்காவல் படையினருக்கு கோவையை தலைமையிடமாக கொண்டு வாலண்டியர் (volunteer) ஊர்காவல் படை சூலூர் முத்துகவுண்டன் புதூர் குரும்பபாளையத்தில் நலசங்கம் செயல்படும், என கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அச்சங்கத்தின் தமிழக தலைவர் ஜேசு தனபால் தெரிவித்தார்.

கோவை : தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஊர்காவல் படையினருக்கு கோவையை தலைமையிடமாக கொண்டு வாலண்டியர் (volunteer) ஊர்காவல் படை சூலூர் முத்துகவுண்டன் புதூர் குரும்பபாளையத்தில் நலசங்கம் செயல்படும், என கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது அச்சங்கத்தின் தமிழக தலைவர் ஜேசு தனபால் தெரிவித்தார்.



மேலும், அவர் கூறுகையில் இச்சங்கத்தின் முதன்மை நோக்கம் பொதுமக்களிடையே சாலை விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மர வளர்ப்பை ஊக்குவிப்பது பேரிடர் காலங்களில் ஊர்காவல் படையினர் பங்கேற்று உதவுவது உள்ளிட்ட செயல்களில் இச்சங்கம் தன்னை ஈடுபடுத்தி கொள்ளும் என்றார்.

ஆந்திரா, டெல்லி, ஹதராபாத், ம.பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலத்தில் ஊர்காவல் படை நலசங்கம் உள்ளது என்றவர் தமிழகத்தில் கோவையை தலைமையிடமாக கொண்டு ஆரம்பித்து உள்ளதாகவும் தமிழகம் முழுவதும் 18,000 பேர் உள்ளனர் என்றார்.

கோவை மாவட்டத்தில் 500 பேர் ஊர்காவல் படையில் பணியாற்றுவதாக தெரிவித்த அவர், முன்னர் 26 நாட்கள் பணிக்கு நாள் ஒன்றுக்கு 150 வீதம் வழங்கபட்டு வந்ததாகவும் தற்போது ஐந்து நாட்கள் பணிக்கு நாள் ஒன்றுக்கு 560 வழங்கபடுவதாக தெரிவித்தார். 

காவல்துறையினருக்கு வழங்கபடுவது போல தங்களுக்கு உடைகள் வழங்கபடுவதாகவும் சாலை பாதுகாப்பு, திருவிழா காலங்ம், தலைவர்கள் வருகை போன்ற நேரங்களில் தங்களது பணி இருக்கும் என தெரிவித்தார். 

குறுகிய காலத்தில் இச்சங்கம் துவக்கபட்டதாகவும் தற்போது வரை 40 பேர் உறுப்பினராக இணைத்து கொண்டு உள்ளனர் எனவும் வரும் காலங்களில் பெரும்பாலானோர் உறுப்பினர்களாக இணைத்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் போது ஊர்காவல் படை நலசங்கத்தின் செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் பாண்டியன், இணை செயலாளர் சுகுமார், உறுப்பினர் மாரிமுத்து உடன் இருந்தனர்.

Newsletter

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...